எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபி டிசம்பர் 10, ஈரோடு மாவட்டத்தில் பெய்ய வேண்டிய ஆண்டு மழையளவான 700 மி.மீட்டரில் மூன்றில் ஒருபங்கு கூட பெய்யாததால், மாவட்ட விவசாயிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். மொத்த சாகுபடிப் பரப்பில் சரிபாதி மானாவாரிப் பகுதியாக இருப்பதால் , மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் விவசாயப் பயிர்கள் போதிய மழையின்மையால் காய்ந்து வரும் அவல நிலை உள்ளது. கீழ்பவானிப் பாசனப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் , பாசனத்திற்கு நீர் திறந்துவிடப் படாததால் , ஆயிரம் அடிக்குக் கீழ் போய்விட்டன. கிணறுகளில் நீர் வற்றி வெகுகாலம் ஆகிவிட்டது. மானாவாரிப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் அதல பாதாலத்திற்குச் சென்றுவிட்டது.
இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப வரவான சொட்டுநீர்ப் பாசனமும் , தெளிப்புநீர் பாசனமும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. சாதாரணமாக வாய்க்கால்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு நீர் பாய்ச்சினால் , அதே வயலில் சொட்டு நீர்ப்பாசனம் அமைந்தால் மூன்று ஏக்கர்கள் வரை விவசாயம் செய்ய இயலும். அதே போல் ‘ஸ்பிரிங்லர்” எனப்படும் தெளிப்புநீர்ப்பாசனத்தால் வறட்சியில் கருகும் பயிர்களைக் காப்பாற்றி, மகசூல் குறைவு படாமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப்பாசனத்திற்கும் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடப்பு மானாவாரிப் பருவத்தில் தெளிப்பு நீர்பாசனம் மூலம் பலனடைந்து நிலக்கடலையில் அமோக மகசூல் பெற்ற நம்பியூரை அடுத்த அஞ்சானூர் ஊராட்சி சின்னாக்கவுண்டன் பாளையம் வெளாங்காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தெரிவித்ததாவது.
‘எனக்கு சொந்தமாக 4 1ஃ2 ஏக்கர் நிலம் உள்ளது. மிகவும் வறட்சிப் பகுதியான நம்பியூர் வட்டாரம் , அஞ்சானூரில் எனது பூமி இருக்கிறது. நான் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை சாகுபடி செய்வேன் இந்த ஆண்டில் இரண்டரை ஏக்கரில் ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தேன் மானாவாரியாக விதைத்திருந்ததால் போதிய மழை பெய்யாமல் கருகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் வேளாண்மைத்துறை சார்பில் தெளிப்புநீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக அறிந்து அதற்கு விண்ணப்பித்து ஈ.பி.சி நிறுவனம் மூலம் ரூ19 ஆயிரத்து அறுநூறு ரூபாய் மானியத்தில் தெளிப்பு நீர்க்கருவிகளைப் பெற்றேன். கடுமையான வறட்சி நிலவியபோது எனது போர் கிணற்றில் இருந்த சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி தெளிப்பு நீர்க்கருவி மூலம் நன்றாக தண்ணீர் தெளித்தேன். மழைக்குப் பதிலாக இந்தக்கருவி எனக்கு நன்கு உதவியது. அறுவடையின் போது ஒரு செடிக்கு 58 காய்கள் வரை இருந்தது ஏக்கருக்கு 820 கிலோ மகசூல் கிடைத்தது. அக்கம் பக்கத்தில் உள்ள வயல்கள் எல்லாம் காய்ந்து சருகாகிப் போன நிலையில், 100 சத மானியத்தில் வேளாண்மைத்துறை மூலம்; கிடைத்த இந்த தெளிப்புநீர்ப்பாசனம் என் பயிரைக் காப்பாற்ற உதவியது. ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு 15 ஆயிரம் ரூபாய் ஆனது. மொத்தம் நிலக்கடலை விற்பனை செய்ததில்; 40 ஆயிரம் வருமானம் கிடைத்ததில் நிகர லாபமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் கிடைத்தது. இந்தப் பருவத்தில் மக்காச்சோளம் விதைத்துள்ளேன் இதற்கும் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகளைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுவேன் “ என்றார்.
‘இது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவிக்கும் போது , நம்பியூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டு நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் அறுபது விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு 37 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறு ஃ குறு விவசாயிக்கு 5 ஏக்கர் வரையில் அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் மானியமும் , 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 எக்டர் வரையில் 75 சத மானியமும் வழங்கப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனம் வேண்டியும் வேளாண்மைத்துறைப் பதிவேட்டில் முன்பதிவு செய்துள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என்றார்
மொத்தத்தில் கடும் வறட்சி நிலவும் இந்தத் தருணத்தில் குறைந்த நீர்த்தேவையில் நல்ல மகசூல் கொடுக்கவும் , வாடுகின்ற நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றவும் விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனத்திற்கும் மாறவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.