முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராயபுரம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் .எஸ்.ஜார்ஜ், உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்பேரில், இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் இராயபுரம், ஆஞ்சநேயர் நகர், 9 வது தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு தெரு முனையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் மேற்படி இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.பாபு, வ/33, ராயபுரம் 2.மோகன், வ/31, ராயபுரம் 3. சக்ரவர்த்தி, வ/38, ராயபுரம் 4.வெங்கடகிருஷ்ணன், வ/34, ராயபுரம் 5.கார்த்திக், வ/20, ராயபுரம் 6.பாபு, வ/26,பிராட்வே ஆகிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.480 மற்றும் 4 சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்