முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி இருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      விருதுநகர்
Image Unavailable

 அருப்புக்கோட்டை :  அருப்புக்கோட்டை அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ நொறுங்கி பிரேதத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் உடல்களை மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மசூதி தெருவை சேர்ந்தவர் நைனா முகமது மகன் மன்சூர் வயது 24 ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த திவான் மைதீன் மகன் முபாரக் அலி வயது 36 ஆகிய இருவரும் சிவகாசியில் இருந்து அருப்புக்கோட்டையை நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை மன்சூர் அலி ஓட்டி வந்தார். ஆட்டோ அருப்புக்கோட்டை அருகே கருப்பையாஊரணி விலக்கு அருகே வரும்போது எதிரே அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி ஆட்டோக்குள் சிக்கி மன்சூர், முபாரக் அலி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்க முடியாமல் மண் அல்லும் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆட்டோவை பிரித்து உடலை எடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுண் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்