முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் மரம் நடும் விழா

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

கள்ளக்குறிச்சி,

 

மேலூர் டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒரு மாணவன் ஒரு மரம் புதிய நடைமுறையின்படி கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மரம் வளர்ப்போம் மண்ணியல் காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

 

விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் அசேக்குமார் தலைமை வகித்தார். இந்திலி வனச் சரக அலுவலர் குணசேகர், கல்லூரியின் முதல்வர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தனர்.

 

கல்லூரியின் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று வழங்கி அதனை கல்லூரி வளாகத்தில் நடச் செய்து முறைப்படி பராமரித்து வருதல் மற்றும் நான்காம் ஆண்டு முடிவில் மரக்கன்றின் வளர்ச்சியனை பிரதிபலிக்கும் புகைப்படத்துன் மாணவனுக்கு பொறியியல் பட்டம் வழங்குவர். இத் திட்டம் கவரனரால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பட்டு அணணா பல்கலைக் கழகத்தால் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

 

மாணவ மாணவிகள் உற்சாகமாக மரக்கன்று நட்டு மரம் வளர்ப்போம் மண்ணியல் காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுதர்சன், கணினி துறைத் தலைவர், உடற் கல்வி இயக்குநர் சுந்தரமூர்த்தி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து துறையின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்