முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் விரக்தியடைந்தால் ஜெயலலிதாவை நினைத்து உற்சாகமடைவேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, அரசியலில் விரக்தியடைந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து கொண்டு உற்சாகமடைவேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பேசினார்.
 
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசியதாவது:-
 
மறைந்த முதலமமைச்சர் இல்லாதது வெற்றிடமாக அமைந்திருக்கிறது. பெண்களின் வளர்ச்சிக்கு அமெரிக்காவில் கூட சிக்கல் இருக்கிறது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எனக்கு ஒரு இன்ஸ்பிரேசனாக இருந்தார், அதை மறைக்க முடியாது, நான் சில நேரங்களில் அரசியலில் விரக்தி நிலையை அடைந்தால் ஜெயலலிதாவை பார்க்கும் போது உற்சாகமடைவேன், அரசியலில் இந்திராகாந்தியை தந்த உற்சாகத்தை அவரிடம் காண முடிந்தது. மூன்றாவது முறையாக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றிருக்கிறார், தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கும் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,. மாணவர்கள் நடத்திய அறவழிப்போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது.. அதுகுறித்து விசாரணை நடத்த போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்