முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் கலெக்டர் கலெக்டர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (30.01.2017) மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் அலுவலர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

உறுதிமொழி

 

 

அண்ணல் காந்தியடிகள் நினைவுதினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியாக "இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்" என்றவாறு வாசிக்க அவரை பின்தொடர்ந்து அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் அலுவலர்கள் அனைவரும் தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) (பொ) இராமன், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பொது மேலாளர் பரிமளம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்