முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் மரணடமடைந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

 தேனி  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்த உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட காமயகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  பொன்ணுவேல் அவர்களின் மகன்  எஸ்.பி.முருகன் என்பவர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து மரணமடைந்தார். மரணமடைந்த நபருக்கு உரிய நிவாரணம் கிடைத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில், விபத்து மரணமடைந்த கட்டுமானத் தொழிலாளி  .எஸ்.பி.முருகன் அவர்களின் மனைவி திருமதி.ரீட்டா தேவி அவர்களிடம் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் விபத்து மரணம் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, தொழிலாளர் நல அலுவலர் திரு.கே.பாலமுருகன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்