முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள நியாய விலைக்கடைகளில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடைகளில்  மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள அருள்புரம் மற்றும் உப்பிலிபாளையம்   பகுதிகளில்  அமைந்துள்ள நியாயவிலைக் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு  பொது மக்களுக்கு வழங்கப்படும் நியாயவிலைப் பொருட்களின் இருப்பு மற்றும் பொருட்களின் தரங்களை ஆய்வு செய்தார். மேலும், பொது மக்களுக்கு வழங்கப்படும் மின்னனு விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு பொது மக்களுக்கு நியாயவிலைப்பொருட்களை எவ்வித அலைச்சலுமின்றி வழங்கவேண்டும் என்றும்  பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மரு.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய  அலுலவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்