எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களில் 4 அல்லது 5 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 12ம் வகுப்பில் 5 அல்லது 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிடாத மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விருதுநகர், திருவில்லிப்புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 4 மையங்களை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து அம்மாணவர்களை விடுதி போல் உணவு வழங்கி அங்கேயே தங்க வைத்து இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அவர்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மிகுந்த சிரமத்திற்கும் பணிச்சுமைக்கும் இடையில் இச்சீரிய முயற்சியை தமிழகத்திலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் எடுத்துள்ளார்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்கள்.
நோக்கம்
பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு இதுமாதிரியான கடைசி நேரத்தில் தனிக்கவனம் செலுத்துவதில் உள்ள சிரமங்களை அறிந்து இம்மாணவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி, ஆர்வத்தை கூட்டி கவனத்தை படிப்பின் மீது செலுத்த தேவையான சூழலை உருவாக்கி அம்மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதன்மூலம் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை தொடர வைத்து, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக இம்மாவட்டத்தை மாற்றவும் அம்மாணவர்கள் வாழ்வில் வளம் பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாகும் மேலும் இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கி அம்மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத் தேர்ச்சியையும் உயர்த்துவது என்பதும் அடிப்படை நோக்கமாகும்.
பயிற்சிக்கான இடங்கள்
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்க வைப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது திருவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு திருவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ் பள்ளியிலும் , விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 150 மாணவர்களுக்கு கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் , அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
பயிற்சியின் தன்மை
திருவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகரில் நடைபெறுகின்ற பயிற்சி மையத்தில் மாணவர்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்கின்றனர். காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வைப்பது 6 மணிவரை யோகா பயிற்சியும் அதைத் தொடர்ந்து 7 மணிவரை வாசிப்பு. பின்னர் காலை 9.30 மணி முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். காலை வேளையில் ஒரு பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். 1 மணி நேரம் பாடம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களை 1 மணி நேரம் படிக்கவைப்பது, பின்னர் 1 மணி நேரம் தேர்வு வைத்து எழுத வைப்பது, இதே போல் மாலை வேளையிலும் வேறு ஒரு பாடத்திற்கு இது மாதிரியான பயிற்சி வழங்கப்படுகின்றது. இம்மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்தில் திறன் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுவதால் அம்மாணவர்கள் விரும்பி கற்க முன்வருகின்றனர். ஒரே மாதிரியான மீத்திறன் உடைய மாணவர்களாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி தேவைப்படுகின்றது. அத்தகைய பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாலையில் மாணவர்களுக்கு 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 5 மணிக்கு சிற்றுண்டியாக பாசிப்பயிறும், சுண்டல் வழங்கப்படும் பின்னர் மாலை 6 மணிவரை விளையாட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 6.30 மணி முதல் 8.00 மணிவரை வாசிப்பு வகுப்புகள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும், பின்னர் இரவு உணவு 8.45 மணிவரை வழங்கப்படும். அதன் பின்னர் 9.00 முதல் 10.00 மணி வரை மீண்டும் வாசிப்பு வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில். இரவு 10.00 மணி படுக்கைக்குச் செல்லுவர். உடன் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தங்கி மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
மெல்ல கற்கும் மாணவர்களான இவர்கள் சேட்டைகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இப்பயிற்சிக்கு பின்னர் அவர்களின் நடவடிக்கையில் நிறைந்த மாற்றத்தை காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை இம்மாவட்டத்தில் 30க்கும் அதிகமான தன்னார்வமிகுந்த, பொது நல நோக்கம் கொண்ட தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் , கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்போடு முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று வருவது இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். உண்மையில் விருதுநகர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் என்பது உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.