தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களில் 4 அல்லது 5 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 12ம் வகுப்பில் 5 அல்லது 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிடாத மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விருதுநகர், திருவில்லிப்புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 4 மையங்களை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து அம்மாணவர்களை விடுதி போல் உணவு வழங்கி அங்கேயே தங்க வைத்து இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அவர்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மிகுந்த சிரமத்திற்கும் பணிச்சுமைக்கும் இடையில் இச்சீரிய முயற்சியை தமிழகத்திலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் எடுத்துள்ளார்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்கள்.
நோக்கம்
பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு இதுமாதிரியான கடைசி நேரத்தில் தனிக்கவனம் செலுத்துவதில் உள்ள சிரமங்களை அறிந்து இம்மாணவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி, ஆர்வத்தை கூட்டி கவனத்தை படிப்பின் மீது செலுத்த தேவையான சூழலை உருவாக்கி அம்மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதன்மூலம் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை தொடர வைத்து, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக இம்மாவட்டத்தை மாற்றவும் அம்மாணவர்கள் வாழ்வில் வளம் பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாகும் மேலும் இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கி அம்மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத் தேர்ச்சியையும் உயர்த்துவது என்பதும் அடிப்படை நோக்கமாகும்.
பயிற்சிக்கான இடங்கள்
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்க வைப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது திருவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு திருவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ் பள்ளியிலும் , விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 150 மாணவர்களுக்கு கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் , அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
பயிற்சியின் தன்மை
திருவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகரில் நடைபெறுகின்ற பயிற்சி மையத்தில் மாணவர்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்கின்றனர். காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வைப்பது 6 மணிவரை யோகா பயிற்சியும் அதைத் தொடர்ந்து 7 மணிவரை வாசிப்பு. பின்னர் காலை 9.30 மணி முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். காலை வேளையில் ஒரு பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். 1 மணி நேரம் பாடம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களை 1 மணி நேரம் படிக்கவைப்பது, பின்னர் 1 மணி நேரம் தேர்வு வைத்து எழுத வைப்பது, இதே போல் மாலை வேளையிலும் வேறு ஒரு பாடத்திற்கு இது மாதிரியான பயிற்சி வழங்கப்படுகின்றது. இம்மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்தில் திறன் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுவதால் அம்மாணவர்கள் விரும்பி கற்க முன்வருகின்றனர். ஒரே மாதிரியான மீத்திறன் உடைய மாணவர்களாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி தேவைப்படுகின்றது. அத்தகைய பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாலையில் மாணவர்களுக்கு 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 5 மணிக்கு சிற்றுண்டியாக பாசிப்பயிறும், சுண்டல் வழங்கப்படும் பின்னர் மாலை 6 மணிவரை விளையாட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 6.30 மணி முதல் 8.00 மணிவரை வாசிப்பு வகுப்புகள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும், பின்னர் இரவு உணவு 8.45 மணிவரை வழங்கப்படும். அதன் பின்னர் 9.00 முதல் 10.00 மணி வரை மீண்டும் வாசிப்பு வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில். இரவு 10.00 மணி படுக்கைக்குச் செல்லுவர். உடன் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தங்கி மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
மெல்ல கற்கும் மாணவர்களான இவர்கள் சேட்டைகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இப்பயிற்சிக்கு பின்னர் அவர்களின் நடவடிக்கையில் நிறைந்த மாற்றத்தை காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை இம்மாவட்டத்தில் 30க்கும் அதிகமான தன்னார்வமிகுந்த, பொது நல நோக்கம் கொண்ட தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் , கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்போடு முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று வருவது இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். உண்மையில் விருதுநகர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் என்பது உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 2 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 5 days 13 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-06-2022.
30 Jun 2022 -
ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா
30 Jun 2022சென்னை: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
-
நேட்டோ படைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது: சுவீடன், பின்லாந்துக்கு புடின் எச்சரிக்கை
30 Jun 2022நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்
-
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமனம்
30 Jun 2022பர்மிங்காம்: இந்தியா -இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
-
ஒருங்கிணைப்பாளர் உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி கடிதம்
30 Jun 2022ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.
-
பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா: இராணிப்பேட்டை விழாவில் முதல்வர் அறிவிப்பு
30 Jun 2022அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று இராணிப்பேட்
-
பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு
30 Jun 2022பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.
-
ஆஸ்கரில் சேர முதன்முறையாக தமிழ் நடிகருக்கு அழைப்பு கெத்து காட்டும் அந்த நடிகர் யார்?
30 Jun 2022தமிழ்நாட்டில்
-
அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
30 Jun 2022கிருஷ்ணகிரி: அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்: 6 பேர் பலி
30 Jun 2022ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
-
பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு
30 Jun 2022ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
-
உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் கெலாட்
30 Jun 2022ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறின
-
அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு பெரியபாளையம்,
30 Jun 2022பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.
-
கழிவு நீரகற்று பணியின் போது விபத்து: ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
30 Jun 2022மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரின் குடும்
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பிரபல வீரர் ஆன்டி முர்ரே தோல்வி
30 Jun 2022லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
2-வது சுற்றில்...
-
பாலியல் பலாத்கார வழக்கில் பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை
30 Jun 2022பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
-
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
30 Jun 2022அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்க
-
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
30 Jun 2022இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், முதல்வர் மு.க.
-
குறு, சிறு தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு உலகளாவிய டெண்டர் எடுக்க மாட்டோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
30 Jun 2022புதுடெல்லி: நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு
-
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கூடுதல் மனு தாக்கல்
30 Jun 2022சென்னை: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அன
-
புதிய டிவி ஷோவில் பங்கு பெறும் பிக்பாஸ் புகழ் நடிகை
30 Jun 2022பிக் பாஸில்
-
டாஸ்மாக் போன்று வருமானம் கிடைத்தால் வனத்துறை மீதும் அக்கறை செலுத்துவீர்களா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2022சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆஸ்கருக்கு நன்றி சொன்ன சூர்யாவின் போஸ்ட் நெட்டில் வைரல்
30 Jun 2022ஆஸ்கர் கமிட
-
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணை: ஐகோர்ட்
30 Jun 2022அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஜூலை 4-ம் தேதியன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித
-
அரசு பள்ளிகளில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
30 Jun 2022சென்னை: தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பண