எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
1. தேர்வை அணுகும் முறை
2. தேர்வு பற்றிய பயம், டென்சன் நீங்க வேண்டும்.
3. எப்படி எழுதுவது என்பது.
தேர்வை அணுகும் முறை: தேர்வை ஒரு பிரச்சனையாக எண்ணக் கூடாது. மாற்றாக ஒரு சவாலாக ஏற்க வேண்டும். தேர்வை ஒரு சிக்கலாக நினைக்கக்கூடாது. அதை திறமையாக வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். நீங்கள் வருடம் முழுவதும் படிக்கின்றீர்கள். பல செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள். பகுத்துப் பார்க்கும் ஆற்றலையும் தொகுத்து உணரும் ஆற்றலையும் பெற்றுள்ளீர்கள். இவற்றை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு வாய்ப்பே தேர்வுகள்.
பல நாட்கள் படித்து உங்களைத் தயார் செய்தீர்கள். அவற்றையெல்லாம் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் மற்றமனிதர்களின் அங்கீகாரம் பெற தேர்வுதான் வாய்ப்பு.
நீங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே உங்கள் அறிவை, ஆற்றலை மன ஆற்றலை, திறமையை உலகம் எடை போடுகிறது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற்று புகழை, அங்கீ காரத்தைப் பெறுங்கள், சந்தோஷம் பெறுங்கள்.
உங்கள் மூளை ஆற்றலை மன ஆற்றலை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உங்களது படிப்பு ஒரு சாதாரண விஷயம். அத்தனை பாடங் களையும் நன்றாகப் படித்து புரிந்து நினைவில் வைக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. அந்த ஆற்றல் முயற்சியால்தான் வெளிவரும். ஆகவே உங்களது மனத்தை மூளையை கல்வியை நோக்கிச் செலுத்தி ஒவ்வொரு நாளும் படித்து வந்தால் நிச்சயமாக உங்களால் அதிக மதிப் பெண்கள் பெறமுடியும். அப்படியிருக்கும் பொழுது ஏன் தேர்வை ஒரு பிரச்சனையாக நினைத்துப் பயப்பட வேண்டும்.
தேர்வுகள் உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் முன்னே உள்ள சவால். ஜெயித்துக் காட்டுங்கள். தேர்வு பயம், டென்ஷன் நீங்க, இதற்கு கீழ்க்கண்ட பயிற்சி உதவும்.
1. மன ஒத்திகைப் பயிற்சி : ஒத்திகைப் பயிற்சி – செய்யும் முறை, கண்களை மூடி அமைதியாக அமர்ந்து கொள்க. உடலைத் தளர்வாக வைத்துக் கொள்க. மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் செய்க. இப்பொழுது பின்வரும் செய்திகளை செய்திகளை மனக் காட்சிகளாகப் பார்த்து வரவும். இன்று தேர்வு நாள். அதிகாலையில் எழுந்து விடுகிறீர்கள். காலைக் கடன்களை யெல்லாம் முடித்து தியானம் செய்து உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறீர்கள்.
முக்கியமான பகுதிகளைத் திருப்புதல் செய்து விடுகிறீர்கள். தேர்வு நடக்கும் இடத்திற்கு அரை மணி நேரம் முன்பே சென்று விடுகிறீர்கள். மணி அடித்தபின் உங்கள் இடத்திற்குச் சென்று அமர்கிறீர்கள். விடைத்தாளில் உங்கள் தேர்வு எண்ணைச் சரியாகப் போட்டு காத்திருக்கிறீர்கள். மணி அடிக்கிறது. கேள்வித்தாள் கொடுக்கிறார்கள். அமைதியாகப் படித்துப் பார்க்கிறீர்கள். அதில் மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு கேள்வியைத் தேர்வு செய்து பதில் எழுதுகிறீர்கள். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை மிக நன்றாக எழுதுகிறீர்கள். எழுதி முடித்ததற்குப் பிறகு முறையாக கட்டி திருப்புதல் செய்தபின் காத்திருக்கிறீர்கள். மணி அடித்தவுடன் கொடுத்து விட்டு கம்பீரமாக தேர்வு அறையை விட்டு வெளிவருகிறீர்கள்.
இப்படியாக ஒவ்வொரு தேர்வாக நன்றாக எழுதி முடிக்கிறீர்கள்.
விடுமுறைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் நீங்கள் அனைத்துப் பாடங்களிலும் மிக அதிக மதிப் பெண்கள் பெற்றிருப்பதாக அறிவிக்கிறார்கள். அந்தச் சாதனையைப் பார்த்து உங்களை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு கிறார்கள். உங்கள் வீட்டில் பெற்றோர் சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முதலானோர் பாராட்டுகிறார்கள். தனிமையில் இருக்கும் பொழுது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் சாதனையை நினைத்து மகிழ்ச்சியடைகிறீர்கள்.
நீங்கள் சாதனையாளர் வெற்றியாளர் உங்களால் முடியும். மெதுவாக கண்களைத் திறந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்தப் பயிற்சியை ஒரு மூன்று நிமிடங்கள் செய்தாலே போதும். தேர்வு வருவதற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்து தினமும் ஒரு முறை இந்தப் பயிற்சியை செய்து வருக. இந்த வெற்றிக் காட்சிகள் உள்மனத்தில் பதிந்து வெற்றியைக் கொடுக்கும்.
பொதுவாக எந்தச் செயலைச் செய்ய நாம் பயப்படுகிறோமோ அந்தச் செயலைத் துணிந்து சில முறைசெய்தால் அந்தச் செயல் பற்றிய டென்சன் பயம் நீங்கும் – தன்னம்பிக்கை வளரும். அதே போல் தேர்வை நன்றாக எழுது வதைப் போலவும், அதிக மதிப்பெண்கள் பெறு வதைப் போலவும் உள்ள காட்சிகளை அடிக்கடி மனத்திரையில் பார்ப்பதால் உண்மையில் தேர்வை நல்லபடி எழுதினால் என்ன உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளை உள்மனதில் உணர முடியும். அந்த உணர்வுகள் உள் மனதில் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்து விடும்.
இந்தப் பயிற்சிக்கு ஆதாரபூர்வமாக மனோ தத்துவ ரீதியிலான விளக்கங்கள் உள்ளன. இச்சிறு பகுதியில் அனைத்து விளக்கங் களையும் தர இயலாது. இந்தப் பயிற்சியைச் செய்யும் பொழுது அதன் பலன் நிச்சயம் உங்களுக்குத் தெரியும்.
தேர்வை எப்படி எழுதுவது: தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சில குறிப்புகள் :
வேகமாக எழுதினாலும் தெளிவாக எழுதுக. முதலில் மிகவும் நன்றாகத் தெரிந்த கேள்விக்கு உரிய விடையை எழுதவும். ஏனென்றால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு அப்பொழுதுதான் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான வினா என்னைப் போட்டுப் பின் விடை எழுதவும்.
பதில் எழுதிக் கொண்டு வரும் போது பாதி யில் ஞாபக மறதி ஏற்பட்டால் அதற்கு உரிய இடத்தை விட்டு விட்டு மேலே தொடர்க. யோசிப்பதிலேயே அதிக நேரம் சென்று விட்டால், நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு விடையெழுத நேரம் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றையும் எழுதியபின் மீண்டும் விட்டுவிட்ட வினாவிற்கான விடையை எழுத முயற்சி செய்க. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு நினைவுகூர்தல் அந்த வினாவிற்கான பதில் நினைவில் வர வாய்ப்பு உள்ளது.
விடையில் முக்கியமான வரிகளை வார்த்தை களை பென்சிலையோ, பேனாவையோ உபயோகித்து அடிக்கோடு இடவும். இது திருத்துபவரின் கண்ணை ஈர்த்து மதிப்பெண் பெறஉதவும்.
உங்களுக்கு தெரியாத வினா ஏதேனும் இருந்தால் அதை விட்டுவிடாமல் அதற்குத் தொடர்புடைய பதிலை எழுதவும். ஏனென்றால் நீங்கள் எழுதிய அளவிற்கு திருத்தும் ஆசிரியர் மதிப்பெண் இட வாய்ப்பு உள்ளது. இதைக் கடைசியாக எடுத்து எழுதி வைக்கவும்.
ஒவ்வொரு விடையிலும் அதற்கு அளவுக் குறியீடுகள் இருந்தால் தவறாமல் எழுத வேண்டும். இறுதிமணி அடித்தவுடன் எல்லா விடைத் தாள்களையும் முறையாகத் தொகுத்துக் கட்டி வைக்கவும். பிறகு ஏதேனும் எழுத முடிந்தால் எழுதுக. ஏனென்றால் சிலர் கடைசி நேரம் வரை அவசரமாய் எழுதிவிட்டு சரியாக வரிசைப்படுத்தாமல் விடைத்தாளைக் கட்டிவிட வாய்ப்பு உள்ளது. இதனால் நன்றாக விடை எழுதியும் மதிப்பெண் பெறமுடியாமல் போய்விடும்.
முழு ஆண்டுத் தேர்வு அல்லது அரசுப் பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன் நண்பர்களுடன் தேர்வு எழுதி முடித்ததைப் பற்றி விவாதம் செய்ய வேண்டாம். ஏனென் றால் நீங்கள் எழுதியது எழுதியதுதான். அதை மாற்றமுடியாது. வீண் மன உளைச்சல் ஏற்பட்டு அடுத்த தேர்விற்கு தயார் செய்யும் நல்ல மன நிலையை பாதித்து விடும்.
மேற்கண்ட நிரூபிக்கப்பட்ட வழிமுறை களைப் பின்பற்றி தேர்வு எழுதினால் நீங்கள் உயர்வெற்றி பெறுவது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


