முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலைப் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ்.சார்பில் சீமை கருவேல அழிப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      கடலூர்

சிதம்பரம்

 

அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தி ரிச்சா ச்ரிட்டபல் எஜூகேஷனல் இணைந்து சிதம்பரம் கீரப்பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணங்குடி அருகில் வால்கரை என்னும் இடத்தில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றும் பணி வழக்குரைஞர் அபிராமி மோனிகா தலைமையில் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சௌந்தரபண்டியன் கலந்துக் கொண்டு பணியை மேற்கொண்டார். திட்ட அலுவலர்கள் திருஞானசம்பந்தம், அற்புதவேல்ராஜா, கொளஞ்சி, ராஜவேலு, ஐயப்பராஜா, கிருஷ்ணசாமி, மற்றும் புவேனந்திரன் மேற்பார்வையில் ஆங்கிலம் மற்றும் உடற்கல்வித்துறை சார்ந்த 100 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் என்.பாஸ்கர் அவர்களும், அரிமா சங்கத் தலைவர் மனோகரன் , பொருளாளர் கதிரவன் மற்றும் அறக்கட்டளையின் செயலாளர் சாமுண்டீஸ்வரி கலந்துக் கொண்டு அப்பணியை சிறப்பித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்