எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைத்து காணொலி காட்சியின் மூலம் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மேல் வகுப்பு மற்றும் பொது வகுப்பு காத்திருப்பு அறை, மதுரை ரயில் நிலையத்தில் இரு மின் தூக்கிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு , மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாநிலங்களை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், ஆகியோர் முன்னிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று (12.03.2017) திறந்து வைத்தார்கள்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் அம்மா மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்தபொழுது அம்மா அவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், பாரத நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சியின் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறைக்கு 2017-18ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதலீடாக ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களை பயணிகளின் வசதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே நிலையங்களில் பல புதுமையான வசதிகளை செய்து வருகின்றது. அதில் ஒரு கட்டமாக இன்று கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு வசதிக்காக கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையமும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர், ரயில் நிலையத்தில் மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் அனைத்து வகுப்பினர் பயன் அடையும் வகையில் ஓய்வறை, பல சிறப்புகளை கொண்ட மதுரை, ரயில் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு மின் தூக்கிகள் தற்பொழுது மதுரை ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகா நகருக்கு சென்று தாயகம் திரும்பி வந்த போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அருட்காட்;சியகம் அமைக்கப்படும். இது அமைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தரலாம். மேலும் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசினார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் வழியில் நடக்கின்ற தமிழக அரசு மக்களின் தேவையினை அறிந்து செயல்படும் அரசாக இருந்து வருகின்றது. தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை முன்னுரிமை அடிப்படையில் இரட்டை வழி பாதையாக விரைவில் மாற்றி தர வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. அதனை விரைவுப்படுத்தி அகலப்பாதையாக மாற்றித் தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மை பராமரிப்பில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வை-பை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
கும்பகோணம்-விருத்தசலம் புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு இரயில்கள் மற்றும் ஏனைய விரைவு ரயில்கள் பாபநாசம் மற்றும் ஆடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். நரசிங்கன்பேட்;டை, சுவாமிமலை நிலையங்களில், திருநெல்வேலி பயணிகள் ரயில் நின்று செல்ல வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் சேவையினை இரவு 11.00 மணிலிருந்து காலை 6.00 மணி வரை இரண்டு கவுண்டரில் வழங்கிட வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகளுக்கு பதில் இருக்கை வசதிகளை பெட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாரந்திர ராமேஸ்வரம், மண்டுதியா எக்ஸ்பிரஸ் ரயில் வசதியினை அதிகப்படுத்தி தர வேண்டும். முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து சென்னை-தூத்துக்குடி-ஜனதா விரைவு ரயில், சென்னை-செங்கோட்டை பாசஞ்சர். தஞ்சை-விழுப்புரம் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும். புதிய ரயில் வசதிகளாக கும்பகோணம் - குருவாயூர், தஞ்சாவூர்-ஹீப்ளி, தஞ்சாவூர்-மும்பாய், திருச்சி-திருநெல்வேலி இடையிலோன இன்டர் சிட்டி ரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டித்து, புதிய ரயில் சேவை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கையாக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ளோம்.
மத்திய அரசின் திட்டங்களை அம்மா வழியில் வந்த தமிழக அரசு சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றது. 144 ஆண்டுகள் கண்டிராத கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவி வருகின்றது. விவசாயிகளும் பொது மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள். கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அம்மா அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
ரயில்வே துறை அமைச்சர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்கள்
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், ரயில்வே பொது மேலாளர் வசித்தாஜோரி, திருச்சிராப்பள்ளி ரயில்வே மண்டல மேலாளர் ஏ.கே.அகர்வால், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.