முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைக்கோட்டை கோ-ஆப்-டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் வருகிற 28ம் தேதி வரை 2 வாங்கினால் ஒன்று இலவசம் : விற்பனை நிலைய மேலாளர் ஜானகிராமன் தகவல்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      திருச்சி

திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் மலைக்கோட்டை கோ-ஆப்-டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தின் சார்பில் 15.03.2017 முதல் 17.03.2017 3 நாட்கள் 2 வாங்கினால் ஒன்று இலவசம் தரப்படும் என அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளர் சி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

அமுதசுரபி

 

 

இது குறித்து அமுதசுரபி விற்பனை மேலாளர் தெரிவித்ததாவது:15.03.2017 அன்று தூய வளனார் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையத்தின் சார்பில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்டு புடவைகள், ஆர்கானிக் சேலைகள், ஜமுக்காளம், போர்வைகள், துண்டுகள், கைலிகள், வேஸ்டிகள், சுடிதார் ரகங்கள், படுக்கை விரிப்புகள், காட்டன்சர்ட்டுகள் மற்றும் கைத்தறி புடவைகள் 2 வாங்கினால் 1 இலவசமாக தரப்படுகிறது. இச்சலுகை 28.3.2017 வரை அமுதசுரபி விற்பனை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

 

மேலும் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் 15.03.2017 முதல் 17.03.2017 வரை நடைபெறும். தொடர்ந்து ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. இச்சலுகையை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கோ-ஆப்-டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளர் சி.ஜானகிராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்