எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிடங்கினுடைய உட்பகுதியின் நிலையையும், கதவுகள் சரியாக உள்ளனவா என்பதையும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த அறிக்கை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) காந்தி, விருத்தாச்சலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


