எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து சிந்தலவாடியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் ரூ.125.70 இலட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், கிரு~;ணராயபுரம் ஒன்றியம், வயலூர் ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று செயல்படுத்தும் குடிமராமத்து பணிகளை செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்திலுள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ளவும் மழைநீரை திறம்பட சேமித்திடவும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த (23.02.2017) அன்று குடிமராமத்து பணிகளை 30 மாவட்டங்களில் செயல்படுத்தி ரூ.100 கோடி செலவில் 1519 பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கிரு~;ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் சிந்தலவாடி கிளை வாய்க்கால் 3 கி.மீ தூரத்திற்கு தூர் வாரி புனரமைத்து கம்மநல்லூர், மகாதானபுரம், சிந்தலவாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 362.14 ஏக்கர் நிலப்பரப்பு பயனடையம் வகையில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் மூலம் வரப்படும் வரத்துவாரிகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார ரூ.40 இலட்சம் மதிப்பில் 11 பணிகளும், அமராவதி ஆற்றின் பாசன வாய்க்கால்கள் ரூ.25.70 இலட்சம் மதிப்பில் 6 பணிகளும், நொய்யல் ஆற்றின் மூலம் ரூ.35 இலட்சம் மதிப்பில் 4 பணிகளும், அரியாறு ஆற்றின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் 3 பணிகளும் என மொத்தம் ரூ.125.70 இலட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் ஆணைக்கிணங்க மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய கருவேல் மரங்கள் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், வீரராக்கியம், வெள்ளியணை, உப்பிடமங்கலம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு உதவிடும் என்ற அடிப்படையில் வங்கிகள், ஆலைகள், பொதுநிறுவனங்கள் ஆகியவற்றுடன் பங்களிப்புடன் இந்த நீர் ஆதார அமைப்புகளில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி எதிர்வரும் மழைக்காலங்களில் நீர் சேகரிப்பு செய்திடும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு ஏதுவாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.8 கோடி மதிப்பில் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகள்; ஆழப்படுத்தியும், பகிர்மானக்குழாய், நீரேற்றுக்குழாய் நீர் சேகரிப்பு தொட்டி, மின்மோட்டார்கள் உள்ளிட்டவைகளை புனரமைத்தும், நிலத்தடி நீர் செறிவாக கிடைக்கும் பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மிகுந்த பங்களிப்புடன் ஆர்வமுடன் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வயலூர் ஊராட்சியில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் பயன்தரக்கூடிய குடிமராமத்து பணிகளில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை காத்திட ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். மேலும், மாறி வரும் பருவச்சூழலில் வறட்சியை எதிர்கொள்ளத்தக்க வகையில் தமிழக அரசு இந்த குடிமராமத்து பணிகளை வழங்கி குடிமக்களை காத்து வருகிறது. இதற்காக கரூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) துரைராஜ், முன்னோடி விவசாயி கோபால தேசிகன், தொண்டு நிறுவன இயக்குநர்கள் நாராயணன் (கிராமியம்), குட்டிமணி (வனம்செய்), வட்டாட்சியர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.