முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் மாணவர் திறன் அறிதல் போட்டிகள்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டியில் உள்ள டேன்சிங் டால்ஸ் என்ற அமைப்பின் மூலம் ஞாயிறன்று பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டது.

பரிசளிப்பு

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேன்சிங் டால்ஸ் என்ற அமைப்பின் மூலம் பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன்களை அறியும் வகையில் மாறுவேடப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை எழுதும் போட்டி, இசைப் போட்டி, ஓவியப்போட்டி, சதுரங்கப் போட்டி, நடனப்போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அமைப்பின் தலைவர் சித்ரா தியாகராஜன் தலைமை தாங்கினார். ராமதாஸ் கவிதா, ராஜா முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ராஜன், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர் சங்க தலைவர் சம்பத், காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகி மதன்மோகன், கவிஞர் சுடர்மதி ஆகியோர் கலந்துக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்