எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழ.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக செய்தி தொடர்பு குழு உறுப்பினர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கழக பொதுக்குழு உறுப்பினரும் திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பொன்.சரஸ்வதி, நாமக்கல் நகர கழக செயலாளரும் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் உட்பட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பேசியதாவது,
பொதுக்கூட்டம்
தமிழகத்தின் பாதுகாவலராக இருந்து ஒன்னரை கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக தமிழகத்தை வாழவைத்த தெய்வமாக என்றென்றும் நம் நெஞ்சிலே குடியிருக்கின்ற இதய தெய்வம் மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு இந்நேரத்தில் அவரை வணங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க இப்பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை என்ற சட்டத்தை கொண்டுவந்து அதை அமுல்படுத்தியது மே 1-ந்தேதி தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தான் நாம் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றோம். நாம் இதை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். கழகம் இரண்டாக உடைந்து விட்டது. இங்கே எவ்வளவு பேர் வருவார்கள் என்று மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். கழகம் இரண்டாக உடைந்துவிட்டது இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் இந்த கூட்டத்தைப்பார்த்து நாம் தப்பு கணக்கு போட்டுவிட்டோம் என்று நினைக்கும் நிலை வந்துவிட்டது. நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 33 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும்நிலையை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்று சொன்னால், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் குறிப்பாக பெண்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருப்பதினால் அம்மா தான் வரவேண்டும். அம்மாவின் ஆட்சிதான் எங்களுக்கு வேண்டும். அம்மாவின் திட்டம்தான் எங்களுக்கு வேண்டும் என்ற முழு மனதோடு பெண்களும் பொதுமக்களும் ஒரே மனநிலையில் வாக்களித்த காரணத்தினால் தொடர்ந்து இரண்டாவது முறையாக நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். எதிர்பாராதவிதமாக அம்மா அவர்கள் உடல்நலம் குன்றிவிட்டார்கள். 22ம் தேதி அம்மா அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆனால் 21ம் தேதிக்கூட அம்மா அவர்கள் தலைமை செயலகம் வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டிவிட்டு முடிந்த திட்டங்களை திறந்து வைத்துவிட்டு, ஒரு முக்கியமான திட்டத்தை துவக்கிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
அந்த திட்டம் என்னவென்றால் தாய்மார்கள் எதிர்பார்க்கின்ற திட்டமான தாலிக்கு அரைப்பவுன் தங்கத்தை ஒரு பவுனாக நான் உயர்த்தி கொடுப்பேன் என்று சொன்னதை அம்மா அவர்கள் இன்று நிறைவேற்றி கொடுத்து, அனைத்து தாய்மார்களின் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார்கள் என்று சொன்னால் இந்த தாய்மார்களின் மீது அம்மா அவர்கள் எவ்வளவு பாசத்தோடு இருந்திருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும். இன்றைய தினம் கழகம் இரண்டாக பிளவுபடாதா. இரண்டு அணியாக போய் நாம் அதிலே உள்ளே புகுந்து குளிர்காய முடியாதா என்று திமுக-வினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அம்மா அவர்கள் வருகின்ற பொழுது என்ன சொல்லிவிட்டு சென்றார்கள். எமக்கு எதிரி என்பது திமுக மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் அம்மா அவர்களுக்கு இந்நிலை ஏற்பட திமுக தான் காரணம் என்பது உங்களுக்கு தெரியும். பொய் வழக்கை அம்மா மீது போட்டு இந்தளவிற்கு அவர்களுக்கு உடல்நலம் பாதிக்க திமுக தான் காரணம். இன்னும் நான்கு ஆண்டு ஆட்சியுள்ளது. அம்மாவின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். நமக்குள் போட்டிபோட்டுக் கொண்டு அதனால் திமுக வந்துவிட்டால், அம்மாவின் ஆத்மா நம்மை மன்னிக்காது. கழக தொண்டர்களும் மக்களும் அதைதான் விரும்பினார்கள். சட்டமன்றத்திலேயே திமுக-வினர் எவ்வளவு ரகளை செய்தார்கள் என்பதனை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். திமுக-வினருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அம்மா அவர்கள் இல்லாத காரணத்தினால் இயக்கத்தை உடைத்துவிடலாம் என்று திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. சட்டமன்றத்திலேயே தகராறு செய்து எப்படியாவது சட்டமன்றத்தை முடக்கவேண்டும் என்று நினைத்தார்கள். புரட்சித்தலைவர் மறைந்தபோது இதேபோல் சட்டமன்றத்திலே ஒரு தகராறு செய்து டிஸ்மிஸ் செய்ய வைத்தார்கள். அப்பன் எவ்வழியோ மகனும் அவ்வழியில் இந்த சட்டமன்றத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று அன்று சட்டமன்றத்தில் தகராறு செய்து சட்டமன்றத்தை நடத்தவிடாமல் செய்தார்கள்.
ஆனால் நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள். எங்களுக்கு இட்டிருக்கின்ற கட்டளை எல்லாம் மக்களை பார்க்க வேண்டும். தொண்டர்களை பார்க்கவேண்டும், வாய்கூசுகின்ற அளவிற்கு எங்களை திட்டினார்கள். ஆனால் 122 சட்டமன்ற உறுப்பினர்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லுகின்ற அளவிற்கு அம்மா அவர்கள் காட்டியவழியில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நாங்கள் 3 மணிவரை அன்றைய தினம் உறுதியுடன் பொறுமையாக இருந்த காரணத்தினால்தான் இன்றைய தினம் அம்மா அவர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி தொடரவேண்டும், கட்சி தொடரவேண்டும் என்று அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே கூறிவிட்டு சென்றதனால், இது சட்டமன்றத்திலும் பதிந்துள்ளது, மக்கள் மனதிலும் பதிந்துள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்திலேதான் விவசாயிகளை கோயம்புத்தூர் பெருமாநல்லூரிலே சுட்டுக்கொன்றார்கள். இன்று விவசாயிகளுக்கு முழு அடைப்பு போராட்டம் என்று கூறுகிறார். காவேரியிலிருந்து வரும் தண்ணீரை நீங்கள் தரவேண்டாம். என்மீது உள்ள வழக்கை நீங்கள் வாப்பஸ் பெற்றுக்கொண்டால் போதும். நான் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகின்றேன் என்ற கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் இன்று விவசாயிகளுக்கு நீலீக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.
மக்களை சந்தித்து இனிமேல் ஆட்சிக்குவரமுடியாது என்பதை அறிந்த திமுக நமக்குள் ஒருபிளவை ஏற்படுத்தி அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வர துடிக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். இனி வரயிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அம்மா அவர்களின் ஆட்சியே தமிழகத்திலும் தொடரும். ஸ்டாலினுக்கு இனி இறக்கு முகம்தான். வறட்சிக்காக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான். அம்மா அவர்கள்தான் வழங்கினார்கள். இப்போதும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வளவு வறட்சியிலும்கூட மோசமான நிதிநிலைமையிலும் கூட அம்மா அவர்களின் திட்டங்கள் ஒன்றுகூட நிறுத்தப்படவில்லை. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.