எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்த அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பேருந்து இயக்கம் குறித்து
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றுமதியம் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். இங்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து கேட்டார். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அந்தந்த ஊர்களுக்கு உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் அரசு பஸ் டிரைவர்களிடம் நேரில் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
பேச்சு வார்த்தை
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்ததால் பிரச்சனைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்ச பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதற்கட்டமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.750 கோடி வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
1250 கோடி
அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொழிலாளர்ளின் பிரச்சனையை தெரிவித்ததும் மேலும் ரூ.500 கோடி சேர்ந்து ரூ.1250 கோடி வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரச போதிய நிதியை வழங்க முன்வந்தும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பொதமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
70 சதவீத பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 313 வழித்தடங்களில், 212 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தூத்துக்குடியில் நான், கலெக்டருடன் சென்று ஆயவு நடத்தினேன். அதே போல் திருச்செந்தூரில் மொத்தமுள்ள 47 வழித்தடங்களில் 41 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நாளைக்குள்(இன்று) அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். இதில் அனுபவமுள்ள டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்து தான் பஸ்களை இயக்கி வருகிறோம். இதுவரை எதுவும் அசம்பாவிதங்கள் இல்லை.
திட்டத்திற்கு அனுமதி
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இத்திட்ட கோப்புகளை மத்திய அரசு அனுமதிக்காக னுப்பிவைத்துள்ளோம்.. இதன்படி திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படயுள்ளது. இதன்மூலம் 100 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்க மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கே 70 எம்.எல்.டி குடிநீரே தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது.
ரூ.5 கோடியில் புது பஸ் ஸ்டாண்டு
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி நடக்கும் போது அனைத்து தரப்பு வணிகர்கள், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு அதன்பின்னரே திட்டம் செயல்படுத்தபடும். கோவில்பட்டியில் ரூ.5 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் போது அனைத்து தரப்பினர் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே போல திருச்செந்தூரிலும் அனைத்து தரப்பினரும் கருத்துகளை அறிந்த திட்டம் நடைமுறைக்கும் வரும். அதே போல் திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்வோம்
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கே 123 எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளது. எங்களிடம் பிரிந்து சென்றவர்கள் ஒரு அணிதான். அவர்கள் எப்போது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நாங்கள் உள்ளோம். வருவது அந்த அணியில் உள்ளவர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பலர் பங்கேற்பு
அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., அம்மா அணி செயலாளர் செல்லப்பாண்டியன், ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், உடன்குடி ஆயிஷா கல்லாசி, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வடிவேலு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட துணை மேலாளர் பழனியாண்டி, திருச்செந்தூர் கிளை மேலாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.