எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை காண்போம்.
சிரிப்பு என்பது மகிழச்சியின் வெளிப்பாடு ஆனந்தத்தின் குறியீடு, மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிக்காட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு சிரிப்பு, மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். "எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்குப் பிடிக்கும். நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திப்பேன்" என்றார் மகாத்மாகாந்தி இதயநோய் உள்ளவர்கள் தினமும் 15 நிமிடங்கள் சிரிப்புக்காக செலவிடலாம் என்று மேரிலாண்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தகவல் தந்துள்ளது.
இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் வாய்விட்டு சிரிக்கத் தெரியாதவர்கள்தான். வாய்விட்டு சிரிப்பதன் மூலம் முகத்தில் பொலிவும் கண்களில் ஒளியும் காந்தமும், தெளிவும் உண்டாகும்.
நுரையீரல் முழுமையாக விரிந்து நமக்கு தேவையான பிராண சக்தியை முழுமையாகக் கிடைக்கச் செய்யும் இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்யும், வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறும். சிறுநீரக செய்லபாடும் நன்கு அமையும், நரம்பு மண்டலத்தில் புத்துணர்ச்சி ஏற்படும். தொண்டைப் பிரச்சனைகள், வாய்வுத் தொந்தரவுகள், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். அடிக்கடி சிரிப்பதால் ரத்தத்தில் "கார்டிசால்" "எபிநெப்ரின்" மற்றும் "எண்டார்பின்" உற்பத்தியாகி மன அழுத்தத்தை நீக்குகிறது.
பண்டைக் காலங்களில் அரசர்கள் மன இறுக்கம் இல்லாமல் இருப்பதற்காக அரசவையில் "விதூஷகன்" என்னும் விகட கவிகளை வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வரும் பணிகளைச் செய்தார்கள். கிருஷ்ணதேவராயர் அரச சபையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்கள் எனப் படுவோரில் விகடகவியாகத் திகழ்ந்த தெனாலி ராமனுக்கு சிறப்பான இடம் உண்டு. நல்ல நகைச்சுவை கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான். கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்றுவிடும்.
ஜப்பானில் வாழ்த்து கொண்டிருக்கும் 120 வயதுள்ள மூதாட்டியை தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது தான் 120 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் நான் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புவது தான் சத்தம் போட்டு சிரிப்பேன் என்றார். சிரிப்பும், சந்தோஷமும் நோயாளிகள் குணம் அடைவதைத் துரிதப்படுத்தும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. நமது நாட்டில் உள்ள நகைச்சுவை மன்றங்களைப் போல அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிரிப்பு மருத்துவமனைகளை அமைத்துள்ளார்கள்.
ஜப்பானில் சிரிக்கும் புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய உண்மையான பெயர் ஹோட்டோ என்பதாகும். அவர் எப்போதும் வாய் திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படி தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் நிறுத்தாமல் சிரிப்பதைப் பார்த்து மற்றவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். சிரிக்கும் பொழுது மூளையிலுள்ள ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்தக்குழாய்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறு. கன்னத்துத் தசைகள், இருதய தசைகள் இதனால் ரத்த சுற்றோட்டத்தில் எளிதாக பராமரிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பிரபல பத்திரிக்கையாளர் கொவ்சின். அவருக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டும் நோய் குணமாகத் தாமதமானது. பழைய சினிமா புரஜெக்டர் ஒன்றை வாங்கி தன் வீட்டில் வைத்து அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவைப் படங்களை தினமும் பார்த்து தன்னை அறியாமல் வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். அந்த படங்களைப் பார்க்கும் நேரங்களில் தன் முதுகு வலியை மறந்தார். விரைவில் குணம் அடைந்தார் என்று அமெரிக்கப் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
சிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும். நகைச்சுவை ததும்ப பேசுபவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். நீங்களும் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு எந்த விஷயத்தையும், நகைச்சுவையோடு பேசக் கற்றுக்கொள்ளுங்கள் நகைச்சுவை நூல்களை அதிகம் படியுங்கள். அழுது கொண்டே பிறக்கும் குழந்தைகளும் சிரிக்கக் கற்றுக்கொண்டு தினமும் 400 முறைகள் சிரிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் சராசரியாக தினமும் 20 தடவை தான் சிரிக்கிறார்கள். அனைவரும் மனம் விட்டு சிரிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்
24 Sep 2025திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு
24 Sep 2025சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு
24 Sep 2025பீஜிங் : பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர்.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி - 14 பேர் காயம்
24 Sep 2025மச்சலா : ஈகுவேடார் சிறையில் கலவரத்தில் 14 ரே் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
அ.தி.மு.க.வை யாரும் அடிமையாக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
24 Sep 2025ஊட்டி : அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
பிரதமரின் நண்பர்களால் நாட்டிற்கு பல சிக்கல்கள் : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
24 Sep 2025பாட்னா : பிரதமர் மோடியின் நண்பர்கள் சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடருக்கு அஸ்வின் தேர்வு
24 Sep 2025மெல்போரன் : ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர்.
-
ஆஸி.,க்கு எதிரான ஆஷஸ் தொடர: இங்கிலாந்து அணி அறிவிப்பு
24 Sep 2025லண்டன் : பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கையை வீழ்த்தியது பாக்.
24 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாக்., வெற்றிப்பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
அண்டர் 19-ல் அதிக சிக்ஸர்கள்: சூரியவன்ஷி உலக சாதனை
24 Sep 2025மெல்போர்ன் : இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
24 Sep 2025ஒகேனக்கல் : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
டி-20 பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து அபிஷேக் சர்மா சாதனை
24 Sep 2025துபாய், : டி-20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.