எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை காண்போம்.
சிரிப்பு என்பது மகிழச்சியின் வெளிப்பாடு ஆனந்தத்தின் குறியீடு, மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிக்காட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு சிரிப்பு, மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். "எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்குப் பிடிக்கும். நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திப்பேன்" என்றார் மகாத்மாகாந்தி இதயநோய் உள்ளவர்கள் தினமும் 15 நிமிடங்கள் சிரிப்புக்காக செலவிடலாம் என்று மேரிலாண்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தகவல் தந்துள்ளது.
இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் வாய்விட்டு சிரிக்கத் தெரியாதவர்கள்தான். வாய்விட்டு சிரிப்பதன் மூலம் முகத்தில் பொலிவும் கண்களில் ஒளியும் காந்தமும், தெளிவும் உண்டாகும்.
நுரையீரல் முழுமையாக விரிந்து நமக்கு தேவையான பிராண சக்தியை முழுமையாகக் கிடைக்கச் செய்யும் இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்யும், வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறும். சிறுநீரக செய்லபாடும் நன்கு அமையும், நரம்பு மண்டலத்தில் புத்துணர்ச்சி ஏற்படும். தொண்டைப் பிரச்சனைகள், வாய்வுத் தொந்தரவுகள், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். அடிக்கடி சிரிப்பதால் ரத்தத்தில் "கார்டிசால்" "எபிநெப்ரின்" மற்றும் "எண்டார்பின்" உற்பத்தியாகி மன அழுத்தத்தை நீக்குகிறது.
பண்டைக் காலங்களில் அரசர்கள் மன இறுக்கம் இல்லாமல் இருப்பதற்காக அரசவையில் "விதூஷகன்" என்னும் விகட கவிகளை வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வரும் பணிகளைச் செய்தார்கள். கிருஷ்ணதேவராயர் அரச சபையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்கள் எனப் படுவோரில் விகடகவியாகத் திகழ்ந்த தெனாலி ராமனுக்கு சிறப்பான இடம் உண்டு. நல்ல நகைச்சுவை கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான். கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்றுவிடும்.
ஜப்பானில் வாழ்த்து கொண்டிருக்கும் 120 வயதுள்ள மூதாட்டியை தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது தான் 120 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் நான் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புவது தான் சத்தம் போட்டு சிரிப்பேன் என்றார். சிரிப்பும், சந்தோஷமும் நோயாளிகள் குணம் அடைவதைத் துரிதப்படுத்தும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. நமது நாட்டில் உள்ள நகைச்சுவை மன்றங்களைப் போல அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிரிப்பு மருத்துவமனைகளை அமைத்துள்ளார்கள்.
ஜப்பானில் சிரிக்கும் புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய உண்மையான பெயர் ஹோட்டோ என்பதாகும். அவர் எப்போதும் வாய் திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படி தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் நிறுத்தாமல் சிரிப்பதைப் பார்த்து மற்றவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். சிரிக்கும் பொழுது மூளையிலுள்ள ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்தக்குழாய்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறு. கன்னத்துத் தசைகள், இருதய தசைகள் இதனால் ரத்த சுற்றோட்டத்தில் எளிதாக பராமரிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பிரபல பத்திரிக்கையாளர் கொவ்சின். அவருக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டும் நோய் குணமாகத் தாமதமானது. பழைய சினிமா புரஜெக்டர் ஒன்றை வாங்கி தன் வீட்டில் வைத்து அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவைப் படங்களை தினமும் பார்த்து தன்னை அறியாமல் வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். அந்த படங்களைப் பார்க்கும் நேரங்களில் தன் முதுகு வலியை மறந்தார். விரைவில் குணம் அடைந்தார் என்று அமெரிக்கப் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
சிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும். நகைச்சுவை ததும்ப பேசுபவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். நீங்களும் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு எந்த விஷயத்தையும், நகைச்சுவையோடு பேசக் கற்றுக்கொள்ளுங்கள் நகைச்சுவை நூல்களை அதிகம் படியுங்கள். அழுது கொண்டே பிறக்கும் குழந்தைகளும் சிரிக்கக் கற்றுக்கொண்டு தினமும் 400 முறைகள் சிரிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் சராசரியாக தினமும் 20 தடவை தான் சிரிக்கிறார்கள். அனைவரும் மனம் விட்டு சிரிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.