எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நாட்டு ரக முருங்கை
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இலவசமாக வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 29.05.2017 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக 1,20,000 நாட்டு ரக முருங்கை மரக்கன்றுகள் மற்றும் 1,20,000 பப்பாளி மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 03.06.2017 முதல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பெயரினை பதிவு செய்து ஊராட்சி செயலரை அணுகி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் வரும் ஜூலை 2017-க்குள் 2,00,000 நாட்டுரக முருங்கை மற்றும் 2,00,000 பப்பாளி மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாற்றங்கால் தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வருகிறது.
மரக்கன்றுகள்
மேலும் முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுகின்றோம். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ப்ரோட்டின் மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது. 100 கிராம் முருங்கை இலையில் 75 சதவீதம் இரும்புச் சத்து உள்ளது. இதில் ஈரப்பதம் 75.9 சதவீதம், புரதம் 6.7 சதவீதம், கொழுப்பு 1.7 சதவீதம், தாதுக்கள் 2.3 சதவீதம், கார்போஹைட்ரேட்டுகள் 12.5 சதவீதம், கால்சியம் 400 மி.கி பாஸ்பரஸ் 70 மி.கி உள்ளது. சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இம்முருங்கை மரக்கன்றை வளர்க்கும் பொழுது முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
இரண்டு மடங்கு புரோட்டின்
முருங்கை இலையில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின் இருக்கிறது. ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது, பாலை விட 4 மடங்கு கால்சியம் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முருங்கை இலையில் உள்ளது.
வருடம் முழுவதும் பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளிப்பழம் இனிப்பான சுவையை தருவதோடு, கரோட்டீன்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி,சி, ப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாச்சியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது. இது கண்பார்வைத் திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கனியாத பப்பாளிப்பழத்தை 250 கிராம் உணவுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கி விடும்.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ.சி. மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து மாரடைப்பு வராமலும், இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் பீட்டா கரோட்டீன் போன்றவை நுரையீரல், இரைப்பை, கருப்பைபுற்று நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. இது உடலில் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆர்வம் உள்ளவர்கள்
இத்தனை நன்மைகள் வழங்கக்கூடிய நாட்டுரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாகப் பெற்று, தங்களது வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
25 யூனிட் வரை
மேலும் அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டமணமுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு வண்டல்மண் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
14 ஊராட்சியில்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,030 குளங்களில் 539 குளங்களுக்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட குளங்கள் மூலம் சுமார் 6,857 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு குளங்களில் நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுவலசு குளம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்குமடைகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
தெருநாய் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Oct 2025புதுடெல்லி : தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத


