எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நாட்டு ரக முருங்கை
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இலவசமாக வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 29.05.2017 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக 1,20,000 நாட்டு ரக முருங்கை மரக்கன்றுகள் மற்றும் 1,20,000 பப்பாளி மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 03.06.2017 முதல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பெயரினை பதிவு செய்து ஊராட்சி செயலரை அணுகி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் வரும் ஜூலை 2017-க்குள் 2,00,000 நாட்டுரக முருங்கை மற்றும் 2,00,000 பப்பாளி மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாற்றங்கால் தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வருகிறது.
மரக்கன்றுகள்
மேலும் முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுகின்றோம். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ப்ரோட்டின் மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது. 100 கிராம் முருங்கை இலையில் 75 சதவீதம் இரும்புச் சத்து உள்ளது. இதில் ஈரப்பதம் 75.9 சதவீதம், புரதம் 6.7 சதவீதம், கொழுப்பு 1.7 சதவீதம், தாதுக்கள் 2.3 சதவீதம், கார்போஹைட்ரேட்டுகள் 12.5 சதவீதம், கால்சியம் 400 மி.கி பாஸ்பரஸ் 70 மி.கி உள்ளது. சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இம்முருங்கை மரக்கன்றை வளர்க்கும் பொழுது முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
இரண்டு மடங்கு புரோட்டின்
முருங்கை இலையில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின் இருக்கிறது. ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது, பாலை விட 4 மடங்கு கால்சியம் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முருங்கை இலையில் உள்ளது.
வருடம் முழுவதும் பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளிப்பழம் இனிப்பான சுவையை தருவதோடு, கரோட்டீன்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி,சி, ப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாச்சியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது. இது கண்பார்வைத் திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கனியாத பப்பாளிப்பழத்தை 250 கிராம் உணவுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கி விடும்.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ.சி. மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து மாரடைப்பு வராமலும், இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் பீட்டா கரோட்டீன் போன்றவை நுரையீரல், இரைப்பை, கருப்பைபுற்று நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. இது உடலில் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆர்வம் உள்ளவர்கள்
இத்தனை நன்மைகள் வழங்கக்கூடிய நாட்டுரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாகப் பெற்று, தங்களது வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
25 யூனிட் வரை
மேலும் அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டமணமுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு வண்டல்மண் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
14 ஊராட்சியில்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,030 குளங்களில் 539 குளங்களுக்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட குளங்கள் மூலம் சுமார் 6,857 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு குளங்களில் நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுவலசு குளம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்குமடைகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
தான்சானியாவில் பயங்கரம்: 2 பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கருகி பலி
30 Jun 2025டொடோமா : தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.