எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்...!
உலகில் இறைவன் படைத்துள்ள 84 லட்சம் பிறவிகளுள் மிக உயர்ந்த பிறவி மானுடப்பிறவி. அதனால் தான் ஔவையார் அரிது அரிது மானிடராதல் அரிது என்றார். மனிதர்களாகிய நாம் மனதை உடையவர்கள். மனம் சிந்திக்கும் கருவி. இறைவன் கொடுத்துள்ள ஒவ்வொரு உறுப்பும் நமக்குப் பயன்படுமாறு படைத்துள்ளான். கைகளால் எல்லாகாரியங்களையும் செய்கிறோம். கால்களால் நடக்கிறோம். காதுகளால் கேட்கிறோம். கண்களால் பார்க்கிறோம். அப்பர் சுவாமிகள் ஒவ்வொரு உறுப்பையும் நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இதுநாள் வரை பொன், பொருள் போகத்திற்காக அற்ப மனிதர்களையும் சிறு தெய்வங்களையும் வணங்கி வந்ததை விடுத்து, பிறப்பும் இறப்பும் இல்லாத அந்தப் பரம் பொருளை தலையாலே இறைவனாரின் திருஉருவையே மனதில் இருத்திப் பழக வேண்டும். வேண்டாச் செய்திகளையும், வெட்டிப் பேச்சுகளையும் காதால் கேட்காமல் புகழ்நாமம் செவிகேட்ப என்ற சம்பந்தப் பெருமானின் அருள்வாக்கின்படி இறைவனுடைய புகழையே கேட்டுப் பழகினால் மனம் ஒருநிலைப்படும்.
தேவையில்லாததையெல்லாம் நினைத்துப் பழகிய நம் நெஞ்சத்தை இறைவனுடைய திருப்புகழை மட்டுமே நினைக்குமாறு பழக்கினால் இறைவன் எப்படி, நினைப்பவர் மனத்தையே கோயிலாகக் கொண்டு குடிபுகுவான் என்று அப்பர் சுவாமிகள் அருள்கிறார். நமது உறுப்புகளை மட்டுமல்ல, நமது உடலுக்கு உள்ளே உள்ள சிறுநீரகம், இதய வால்வுகள் போன்றவற்றையும் இரண்டு இரண்டாக நமக்கு அருளியுள்ள இறைவனின் பெருங்கருணையை நினைத்துப் பார்க்க வேண்டும். இரண்டு உறுப்புகளில் ஒன்று பழுதாகி வேலை செய்யவில்லை என்றாலும் மற்ற உறுப்பின் துணை கொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பளித்துள்ளான் இறைவன், இந்த இரண்டு உறுப்புகளும் ஒரே வேலையைத் தான் செய்கின்றன.
ஆனால் மனிதனுக்கு ஒரே வாயை மட்டுமே படைத்தான். அது மட்டுமல்ல. மற்ற இரண்டு இரண்டு உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைத் தான் செய்கின்றன. சிறுநீரகங்கள், இதய வால்வுகள் எல்லாவற்றுக்கும் ஒரே வேலையை வைத்தான் இறைவன். ஒரே வாய்கொண்டு உணவு உண்ணவும், பேசவும் வைத்தான் இறைவன். எல்லா உயிர்களும் வாயினால் உண்ணும் வேலையை செய்கின்றன. ஒரு கூடைத் தவிடு, ஒருகட்டுப்புல் உண்ணும் அகன்ற பெரிய வாயையுடைய மாட்டை வாயில்லாப் பிராணி என்கிறோம். அதிகத்தீனி உண்ணுகின்ற யானையும் வாய் இல்லாப் பிராணிதானே. ஆனால் உண்பதால் மட்டுமே வாயை, வாய் என்று பெரியோர் கூறுவதில்லை. பேச வேண்டியவைகளைப் பேசுகின்ற வாயே வாய் என்றார்கள்.
வடிவேலன் தன்னை பேசா வாயென்ன வாயே, வள்ளி மணாளனைப் பேசாவாயென்ன வாயே என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைவர்கள் கூறுகிறார்.
இறைவனுடைய பெருங்கருணையை இடையறாது நினைத்தால் அவ்வாறு ஆழமாக நினைக்கும்போது கருங்கல்லைப் போன்ற நம் மனம் தஞ்சத்து அருள்பரிவான் என்றார் அருணகிரி நாத சுவாமிகள். கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலம் என்று ஆமாறும் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் என்று கூறுகின்றார் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவனுடைய கருணை ஆயிரம் ஆயிரம் வகையாக நமக்கு அமைந்திருக்கிறது. இறைவன் தாயினும் சாலக் கருணை புரிகின்றான். பெற்ற தாய் இப்பிறவிக்கு மட்டும் உரியவள் இறைவன் பிறவிகள் தோறும் நமக்கு தாயாக விளங்குகிறான். தொடர்ந்து நின்ற தாயானை என்கிறார் அப்பர் சுவாமிகள்.
இந்த உடம்பை அருமையிலும் அருமையாகப் படைத்து இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து உடம்பை இயக்க வைக்கிறான். நாம் தாய் வயிற்றில் இருந்த போதே இறைவன் நமக்கு உணவு தந்துள்ளான். பிறந்த பின்னர் குழுந்தைக்குத் தாய் பால் ஊட்டுகின்றாள். கருவில் உள்ள பிள்ளைக்கு அவளால் உணவு தர இயலாது. கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லுக்குள் தேரைக்கும் விருப்போடு உணவளிக்கும் ஈசன் என்கின்றார் ஔவையார். கருவில் உள்ள குழந்தைக்கு இறைவன் உணவு ஊட்டுவதால் தான் அது பிறந்த உடன் கருப்பாக காட்டு மலம் கழிக்கின்றது. மேலும் அக்குழந்தை பிறக்கும் முன்பாக தாய்க்கு இரு மார்புகளிலும் பால்சுரக்க அருள்புரிகின்றான் இறைவன்.
ஞான சூரியனாக விளங்கிய அருணகிரி நாதசுவாமிகள் முருகனிடம் ஒருவரம் கேட்கின்றார். முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்றருள்வாய் என்கிறார். எனவே நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து இடையறாத பேரின்பத்தைப் பெறுவதற்கு இறைவனுடைய திருவருளை நினைத்து உள்ளம் உருகி நிற்பதே சிறந்த வழியாகும்.
டாக்டர் கே.பி.முத்துசாமி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்
18 Sep 2025மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.