எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நடைபெற்றது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றார்கள்.
இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் கோவைக்கு மாலை 4.15 மணிக்கு வந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டா் மூலமாக 4.25 மணிக்கு ஈஷா யோக மையத்துக்கு புறப்பட்டு சென்றார். பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்ற பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவா் இன்று (திங்கள்கிழமை) (பிப்.16) காலை 10.35 மணியளவில் அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்து, பின்னா், 10.45 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


