எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான மற்றும் அதிக சம்பளம் தரும் வேலைகள், பெரும்பாலும் உங்களை இருக்கையில் கட்டிப்போடுபவைகளாகவே இருக்கின்றன.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்புகளை பற்றி அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முழுவது சராசரி வருமான விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் இவை அனைத்து பணிகளுக்கும் ஒரு "அசாதாரன அறிவும், வியக்கவைக்கும் திறமையும் வேண்டும்".
13 வேலைவாய்ப்புகள் : ஒரு வகுப்பறையிலோ, ஒரு பயிற்சிக் களத்திலோ அல்லது பூமியின் மேல் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமான காக்பிட்டிலோ அமர்ந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
டாக்டர் : சராசரி ஆண்டு வருமானம்: 191,880 டாலர்கள் (ஒரு டாலர் 60 ரூபாய் என வைத்து கணக்குப் போட்டு நீங்கள் வயிறெரிவது தெரிகிறது). மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு அர்த்தமுள்ள, ஈடுபாடுடன் கூடிய பணியைச் செய்வதால் அதற்கேற்ற சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். எலும்பு சிகிச்சை நிபுனர், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் இன்னும் அதிகமாக ஊதியம் பெறுவார்கள். இதில் மயக்க மருந்து சிறப்பு மருத்துவர் சராசரியாக 235,070 டாலர்களை ஆண்டிற்கு சம்பளமாகப் பெறுகிறார்கள்.
“மயக்கவைக்கும் ”நர்சு javascript:void(0); “மயக்க வைக்கும்” நர்சு ஆண்டு சம்பளம்: 157,690 டாலர்கள்: அனைவரையும் மயக்கமடையச் செய்யும் ஒரு அதிரவைக்கும் பணியைச் செய்யும் நர்சுகள் கூட சராசரி ஆண்டு வருமானமாக 1,00,000 டாலர்களுக்கும் மேல் பெருகிறார்கள். இவர்களில் சில பேருக்கு மயக்க மருந்தளிக்கும் டாக்டருக்கு உதவியாக இருப்பது மட்டுமே பணி.
பெட்ரோலிய இன்ஜினியர் : ஆண்டு சராசரி வருமானம்: 149,180 அமெரிக்க டாலர்கள். எப்படியாவது பூமிக்கு அடியில் இருந்து எண்ணையை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எடுத்துவிடுவது இவர்கள் வேலை. இன்றைய தேதிக்கு மிகவும் முக்கியமான திறமை இவர்களுடையது. தேவையான உபகரணங்களை உருவாக்குவதும் மென்பொருளை கண்டுபிடிப்பதும் இந்த வேலையில் அடக்கம்.
விமான பைலட் : ஆண்டு சராசரி வருமானம்: 129,600 அமெரிக்க டாலர்கள்: நெருக்கடியான இடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும், குறைந்தபட்சம் நல்ல சம்பளமாவது கிடைப்பதுடன் உலத்தை நன்கு சுற்றிப் பார்க்கலாம்.
சட்டப் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 122,280 அமெரிக்க டாலர்கள்: ஒரு சட்டப் பேராசிரியராக இருப்பது நல்ல விஷயம் தான். அடுத்த தலைமுறை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கற்றுத்தரும் வாய்ப்புடன் அருமையான சம்பளமும் கிடைக்கும். யாருக்குத் தெரியும், பில் கிளின்டனைப் போலவோ அல்லது பாரக் ஒபாமாவைப் போலவோ முதலில் சட்டப்பாடம் எடுத்துவிட்டு பின்னர் பெரும் பொறுப்புகளையும் பணிகளையும் நீங்கள் கையாள நேரிடலாம்!
புவிஆய்வாளர் : இப்பணிக்கான ஆண்டு வருமானம் 108,420 அமெரிக்க டாலர்கள்: இந்த புவி அறிவியலாளர்கள், ஒரு பெரிய அளவிலான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகளையோ, பொறியியல் அல்லது சுற்றுச் சூழல் ஆலோசனை நிறுவனங்களிலேயோ, சுரங்கம் அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரியலாம்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் : ஆண்டு சராசரி வருமானம் 105,880 அமெரிக்க டாலர்கள்: கற்றுத்தரும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் அல்லது விலங்கின மருத்துவர்கள் பணி எளிதாக ஒரு ஆறு இலக்க சம்பளத்தைப் பெற்றுத் தரும். சராசரி சம்பளம் தொழிலைச் செய்துவரும் ஒரு இயன் மருத்துவரை ஒப்பிடுகையில் குறைவானாலு, அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
விண்வெளி பொறியாளர் : ஆண்டு சராசர் சம்பளம்: 105,450 அமெரிக்க டாலர்கள். விண்கலங்களையும் விமானங்களையும் தயாரிப்பதைவிட ஒரு ஆர்வமுள்ள பணி வேறு எதாவது இருக்க முடியாது. பெரும்பாலான எஞ்சினியர்கள், அலுவலத்தில் தங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகையில், மற்றவர்கள், நேரடியாகக் களத்திற்குச் சென்று அவை எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை கண்கானிப்பார்கள்.
ரசாயன பொறியாளர் (கெமிக்கல் இன்ஜினியர்) : ஆண்டு சராசரி வருமானம்: 104,340 அமெரிக்க டாலர்கள்: மருந்திலிருந்து எரிபொருள் வரை அனைத்திலும் இவர்கள் பங்கு இன்றியமையாதது. பலர் அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், மற்றவர்கள், சோதனைக்கூடங்களிலும் அல்லது அவர்களுடைய அறிவியலைப் பயன்படுத்தி உணவு அல்லது ரசாயனங்கள் உருவாக்கப்படும் தொழிற்கூடங்களிலும் பணிசெய்யும் வாய்பை பெறுகின்றனர்.
பொறியியல் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 102,880 அமெரிக்க டாலர்கள். இந்த வேலை பெரும்பாலும் கற்றுத்தருதலையோ அல்லது ஆராய்ச்சி செய்வதையோ முக்கியமாகக் கொண்டவர்ளை உள்ளடக்கியது.
பொருளாதாரப் பேராசிரியர் : ஆண்டு சராசரி வருமானம்: 100,490 டாலர்கள்: கல்லூரி வகுப்பறைகளில் நல்ல வருமானமும், பொருளாதாரப் பேராசிரியர்களுக்கு எங்கு சென்றாலும் அவர்களில் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் திறமைகளுக்காக நல்ல புகழும் கிடைக்கிறது. தற்போதைய அமெரிக்காவின் அரசு நிதி ஆலோசனைத் தலைமை பொறுப்பு வகிக்கும் ஜானட் எல்லன், அரசாங்க வேலைக்கு முன்பாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மேலாளர் (ப்ரொடக்ஷன் மேனேஜர்) : ஆண்டு சராசரி வருமானம்: 99,370 டாலர்கள்: ஒரு சராசரி தொழிற்கூட மேலாளர், ஏறக்குறைய ஆறிலக்க சம்பளம் பெறுகிறார். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்வது அலுவலகத்தில் செய்வதை விட சுலபமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுரங்க மற்றும் புவியியல் ஆய்வுப் பொறியாளர் (மைனிங் அண்ட் ஜியாலஜிக்கல் எஞ்சினியர்): ஆண்டு சராசரி வருமானம் $96,950 டாலர்கள். சுரங்கத்தில் அல்லது நில உருவாக்க களங்களில் பூமிக்குக் கீழே என்ன நடக்கிறது என்பதையும் அவை சுற்றுச்சூழலுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பானதுதானா என்பதை அறிந்தவர்கள் இவர்கள். சுரங்கத் தொழில் ஒரு ஆபத்தான தொழிலாக இருப்பினும், சம்பளம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லைதான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
லக்னோவில் நடந்த இந்தியா 'ஏ'-ஆஸி. 'ஏ' டெஸ்ட் போட்டி டிரா
19 Sep 2025லக்னோ : இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே லக்னோவில் நடந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
20 Sep 2025திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.