எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையிலும், தென் இந்தியாவிலேயே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் தனி முத்திரை பதித்து சாதனை படைத்து வருகிறார்.
உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா, இஸ்ரோல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவு பர்ரி பேரீச்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தாவரவியல் ஆய்வுக்கூடங்களில் திசுமூலமாக உற்பத்தி செய்து, பல்வேறு நிலைகளில் சுமார், 3 ஆண்டுகள் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர், சீதோஷ்ன இயற்கைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஓராண்டு வரை பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு, நன்கு திரட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது. அதை வாங்கி நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். தொடங்கி முதல் வருடத்திலேயே ஒவ்வொரு செடியிலும் முதல், 50 கிலோ வரை காய்க்கும். மூன்றாண்டு பருவத்தில், 100 கிலோ வரையும், ஐந்தாண்டு பருவத்தில், 100 கிலோ முதல், 300 கிலோ வரை காய்க்கும் தன்மை கொண்டது.
மேலும், பேரீச்சை பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், அஜ்வால், பர்ரி பேரீச்சை அதிக சதைப்பற்றும், ருசித்தன்மையும் உள்ள முக்கிய ரகங்களாக உள்ளன. இதுபோன்ற பேரீச்சை ரகங்கள் வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த, 23 ஆண்டுகளாக தமிழகத்தில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்து அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின் விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் ஈடுபட்டு தனிமுத்திரை பதித்துள்ளார்.
இது குறித்து விவசாயி நிஜாமுதின் கூறியதாவது: தென் இந்தியாவிலேயே முதன்முதலில், தருமபுரி மாவட்டம், அரியகுளம் பகுதியில் தான் பேரீச்சை உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த, 1982 முதல், 1990 வரை சவுதிஅரேபியாவில், வேளாண் பயிற்சிகூடத்தில் பணியாற்றி வந்தேன். பின்னர், இடையில் அரியகுளம் பகுதியிலுள்ள என்னுடைய சொந்த நிலத்தில் பர்ரி பேரீச்சை செடி நாற்றுவிடப்பட்டு மீண்டும், சவுது அரேபியாவிற்கு சென்றேன். அதைதொடர்ந்து, இங்கு 1991ல் பேரீச்சை செடி நடவு செய்யும் பணியை துவங்கினேன். தற்போது, ஒரு ஏக்கருக்கு, 76 செடிகள் நடப்பட்டு, 13 ஏக்கரில், 630 பேரீச்சை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி செலவும் குறைவு தான். சென்றாண்டு மட்டும், 15 டன் பேரீச்சை உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒவ்வொறு ஆண்டும் உற்பத்திறன் பெருகிகொண்டே இருக்கும்.
இங்கு, பர்ரி, கண்ணிந்தி, அஜ்வால், ரூஸ், மிஜ்னாஸ், கத்தாவி, கலாஸ், அலுவி, ஜகிதி, சிலி உள்ளிட்ட, 32 ரக பேரீச்சை சாகுபடி செய்கிறேன். பெரும்பாலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மரங்களில் பூ பூக்கும். ஜூன்- ஜூலை மாதம் நல்ல தரமான பேரீச்சை பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. பேரீச்சை குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையும், செடி ஒன்று, 3,576 ரூபாய்க்கு வற்க்கப்படுகிறது. இதற்கான சாகுபடி காலம், ஆறு மாதம் மட்டுமே. மீதமுள்ள ஆறு மாதங்கள் மரங்கள் பராமரிக்கப்படும். நிலத்தில், குறைந்த ஈரப்பதம் இருந்தாலே உற்பத்திக்கு போதுமானது. தவிர, ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு எதுவும் கிடையாது. விவசாயிகள் இந்த செடிகள் வளர்ப்பது குறித்து நன்கு தெரிந்து கொண்டு கையாண்டால், குறைந்த செலவில் அதிக வருவாய் பெறலாம். அதேபோல், வறட்சியிலும், நன்கு வளரக்கூடிய தன்மையும் கொண்டது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தென்னை, மா, வாழை காய்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பேரீச்சை உற்பத்தி இதற்கு மாற்றாக செழிப்படைந்துள்ளது. மேலும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பேரீச்சை வளர்ப்பில் அரசு மானியம் அளிக்கிறது. குஜராத்தில், 35 சதவீதமும், ராஜஸ்தானில், 90 சதவீதம் அந்த அரசு மானியம் வழங்கின்றன. அதேபோல், தமிழக அரசும், பேரீச்சை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


