எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தி.மு.க ஆட்சியில் தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பல்வேறு அமைப்பினர் ...
தமிழக சட்டசபையில் நேற்று பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிருவாக சீரதிருத்தத்துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிக்கள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வூக்கால நன்மைகளும் ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கையில் பங்கேற்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, போராட்டங்கள் நடத்துவது தவறு என்று நான் சொல்லவில்லை. தங்களது உரிமையை கேட்க பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், அப்படி போராட்டம் நடைபெறுகிற போது பொறுப்பில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அவர்களை அழைத்து பேசி அதற்குரிய பரிகாரத்தை கண்டு, அந்தப் போராட்டங்களுக்கு முடிவு காணக்கூடிய வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நெடுவாசல் போராட்டம்
அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டங்கள் வல்லரசு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு அனுமதி அளித்து அதனைத் தொடர்ந்து கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நெடுவாசல் போராட்டம் இன்றோடு (நேற்று) நூறாவது நாள், அதனால்தான் அதை சொல்கிறேன் என்று கூறினார்.
தி.மு.க ஆட்சியில்தான் ...
அப்போது குறுக்கிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டகாரர்கள் சந்திக்க அனுமதிக்கேட்டால் நிச்சயம் அனுமதி கொடுக்கிறோம். நெடுவாசலில் மத்திய அரசிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மாநில அரசுக்கு எதிராக அல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது. 1989-ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் தி.மு.க ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அப்போதே இவ்வளவு பாதிப்பு வரும் என்பதை தெரிந்து அனுமதிக்காமல் இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்சனையே வந்திருக்காது.
உண்மைதான் ...
அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் திட்டம் கொண்டுவர ஓப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதுதான் உண்மை. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துப் போடப்படுகின்ற நேரத்தில், அதை ஆய்வு செய்து, மக்களுடைய கருத்துகளை அறிந்து, அதற்கு பிறகு அந்த திட்டம் வரும் என்று தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டதே தவிர திட்டம் வருவதற்காக கையெழுத்துப் போடப்படவில்லை. ஆனால், அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் வந்தப் பிறகு, உங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் அந்த மீத்தேன் திட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம்
அப்போது குறுகிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, மீத்தேன் திட்டத்திற்கு 4.1.2011 அன்று ஒப்பந்தம் போட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளீர்கள். அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுப்பணிக்குரிய நடவடிக்கைகளை எடுக்கத்தான் உத்தரவு போட்டிருக்கிறதே தவிர, அந்த பணியை தொடங்குவதற்கு எந்த உத்தரவு அல்ல. அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருபனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காகளிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய தாலுக்காகளிலும் பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன் வாயுவை கிணறுகள் மூலம் பிரித்தெடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 29.7.2010 அன்று ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
இதனைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனம் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு ஆய்வு மற்றும் உற்பத்தியைத் துவக்க பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கோரி தமிழ்நாடு அரசுக்கு 28.10.2010 அன்று விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் முந்தைய தி.மு.க அரசு, மேற்படி ஜிஇஇசிஎல் நிறுவனம் அத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 1.1.2011 அன்று அரசாணை மூலம் தஞ்சாவூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் கடிதம், மற்றும் திருவாரூர் மாவட்ட சுரங்கத் துறையின் கடித்தின்படி அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4.1.2011 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அப்போதைய தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைச் சார்ந்த யோகேந்திர குமார் மோடி ஆகியோருக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. என்று முதல்வர் பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு புடின் அழைப்பு
11 May 2025மாஸ்கோ: போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.