முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னிட்டு அதிநவீன மின்னணு திரை களவிளம்பர வாகனத்தின் மூலம் திரைப்படம் ஒளிபரப்பும் பணி: கலெக்டர் சிவஞானம் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.- விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, ்தங்கல் மெயின்ரோட்டில், அண்ணாமலையார்நகரில் அமைந்துள்ள மைதானத்தில் 23.10.17 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு திரை களவிளம்பர வாகனத்தின்  மூலம் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் காவியத் திரைப்படம் ஒளிபரப்பும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், பார்வையிட்டார்கள்;.
 விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, ்தங்கல் மெயின்ரோட்டில், அண்ணாமலையார்நகரில் அமைந்துள்ள மைதானத்தில் 23.10.17 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக சிறப்பான முறையில் செய்து வருகிறது.
மேலும், இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறைகள் மூலமாக நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் காவியத்திரைப்படங்களை பொதுமக்கள் பார்வையிடும் விதமாக 5 மாவட்ட அதிநவீன மின்னணு திரை களவிளம்பர வாகனம் வரவழைக்கப்பட்டு களப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 19.10.17 முதல் 23.10.17 வரை 5 நாட்கள் சென்று டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பணிகளை மேற்கொள்ளுவார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) காதர் மீர், விருதுநகர் வட்டாட்சியர் இப்ராகிம் ஷா, உட்பட அரசு அலுவலர்களபலர் கலந்து கொண்டனர்.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து