எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பங்கேற்று ரூ. 2 கோடியே 66 இலட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மடிக்கணினி
ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கிய பின்னர் இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்று விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 6 ஆண்டுகளில் 65 புதிய கல்லூரிகளை தொடங்கப்பட்டது. 961 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு 20 சதவீதம் அரசு கல்லூரியில் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு ஆணையிடப்பட்டு மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்; எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது அதில் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் 3 உறுப்பு கல்லூரியும் அடங்கும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியை அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இதனால் 19 ஆயிரம் கட்டணமாக செலுத்தி வந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் ரூ. 2 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்படும்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 335 மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், மொரப்பூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் பொ.துறிஞ்சிப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் 356 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் மற்றும் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கு ரூ.31 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் ஆக மொத்தம் 1973 மாணவ,மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 96 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 422 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 495 மதிப்புடைய விலையில்லா மடிக்கணினி ரூ.19.46 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 498 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.121.02 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கடின உழைப்பும் விடா முயற்சி செய்து படித்து பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று எதிர் காலத்தை சிறப்பாக அமைத்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண