எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பங்கேற்று ரூ. 2 கோடியே 66 இலட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மடிக்கணினி
ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கிய பின்னர் இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்று விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 6 ஆண்டுகளில் 65 புதிய கல்லூரிகளை தொடங்கப்பட்டது. 961 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு 20 சதவீதம் அரசு கல்லூரியில் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு ஆணையிடப்பட்டு மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்; எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது அதில் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் 3 உறுப்பு கல்லூரியும் அடங்கும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியை அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இதனால் 19 ஆயிரம் கட்டணமாக செலுத்தி வந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் ரூ. 2 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்படும்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 335 மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், மொரப்பூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் பொ.துறிஞ்சிப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் 356 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் மற்றும் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கு ரூ.31 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் ஆக மொத்தம் 1973 மாணவ,மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 96 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 422 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 495 மதிப்புடைய விலையில்லா மடிக்கணினி ரூ.19.46 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 498 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.121.02 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கடின உழைப்பும் விடா முயற்சி செய்து படித்து பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று எதிர் காலத்தை சிறப்பாக அமைத்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
என்ன சூழ்ச்சி செய்தாலும் எந்த அழுத்தத்திற்கும் நான் அடங்கிப் போக மாட்டேன்: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
25 Jan 2026சென்னை, அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை என்று த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் செய்யவே மாட்டேன்.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவு
25 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –26-01-2026
25 Jan 2026 -
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்
25 Jan 2026சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
-
தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு
25 Jan 2026சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.
-
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
25 Jan 2026தெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்கள
-
ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
25 Jan 2026புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குஜராத்தில் விபத்து - 6 பேர் பலி
25 Jan 2026காந்தி நகர், குஜராத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.
-
நாட்டையே முடக்கிய கடும் பனிப்புயல்: அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் சேவை ரத்து
25 Jan 2026நியூயார்க். அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க.வின் இண்டியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Jan 2026புதுக்கோட்டை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.
-
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்: மத்திய அரசு
25 Jan 2026புதுடெல்லி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள
-
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
25 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
-
சீனாவுடன் தொடரும் உறவு: கனடாவுக்கு 100 சதவீத வரி மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்
25 Jan 2026நியூயார்க், சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான்: த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான் என்றும், த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் த.வெ.க.


