எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் கலாச்சாரத்திற்கு முன் மனிதர்களை இரண்டு பிரிவாக பிரித்தனர். ஒன்று உட்கார்ந்த இடத்தில் மூளைக்கு வேளை கொடுக்கும் மந்திரிகள், கணக்கு வழக்கு பார்க்கும் நபர்கள். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத உட்கார்ந்த இடத்தில் வேலை பார்த்த இவர்கள் அந்த காலத்தில் சைவ உணவு வகைகளை மட்டுமே உண்டனர்.
இரண்டாவது போருக்கு செல்லும் நபர்கள். எதிர்நாட்டினருடன் போர் செய்து தாய் நாட்டை காக்கும் பணியை கொண்ட இவர்கள் உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டதால் அவர்களுடைய உணவு வகைகளில் அசைவம் கலந்திருந்தன. அதிலும் அசைவம் உடலில் எந்த ஒரு நோயையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்தற்காக அசைவ உணவு சமைக்கும் போது அத்துடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற மூலிகை தன்மை கொண்ட உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டனர்.
ஆனால், தற்போதைய வாழ்க்கை முறையில் அவ்வாறு இல்லை. உடல் உழைப்பு உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என எல்லோருமே விரும்பியதை விரும்பும் நேரங்களில் விரும்பிய வகைகளில் உண்டு வருகின்றனர். இந்த முறையற்ற உணவு பழக்க வழக்க முறைகளால் ஒவ்வொருவரும் விதவிதமான உடல்வாகு மற்றும் நோய்களை சந்தித்து வருகின்றனர். இதில் முக்கியமானது கொழுப்பு பிரச்சினை. மனித உடலுக்கு மிகத்தேவையான சத்து கொழுப்பு சத்தாகும். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேரும் போதுதான் இந்த பிரச்சினையே தலைதூக்குகிறது. ஹோட்டல் உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, சிகரெட் பிடிக்கும் பழக்கம், கொழுப்பு நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு உடல் பருமன், வயிறு, இடுப்பை சுற்றி கொழுப்புகள் தேங்கி பானை போன்ற தொப்பை உண்டாகிறது. இதோடு சேர்த்து பலவிதமான நோய்களும் இலவச இணைப்பாக தொற்றிக்கொள்கிறது.
விதை இல்லாத பேரீச்சம் பழம் ஐந்து, இஞ்சி சாறு இரண்டு டீ ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தில் உள்ள நார் சத்து இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புகளை கரைத்து விடும். இஞ்சியில் உள்ள அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து விடும். தினமும் இரவில் உணவு உட்கொண்ட பிறகு இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுமையாக கரைந்து விடும்.
தக்காளி ஐந்து, பூண்டு ஐந்து பற்கள், எலுமிச்சை சாறு ஆறு டீ ஸ்பூன் என எடுத்து அரை லிட்டர் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டி போட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சரும செல்களுக்கு புத்துயிர் அளிப்பதுடன் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பை கரைத்து உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும். இந்த பானத்தை தினமும் காலை உணவு உட்கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். கறிவேப்பிலை உணவில் மணம் தருவது மட்டுமல்ல, உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கவும் உதவும். தினமும் அதிகாலையில் சிறிது கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை குறைக்கும். சோம்பு இரண்டு டீ ஸ்பூன் அளவில் எடுத்து இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இரவில் ஒரு டீ ஸ்பூன் அளவில் எடுத்து நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பாக சூடாக்கி பருக வேண்டும். திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஒரு கலவை. உடல் சுத்தம், புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு சிறந்தது. தினமும் ஒரு டீ ஸ்பூன் அளவு திரிபலா பொடியை சுடுநீரில் போட்டு தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். பூண்டு வளர் சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து கல்லீரல் மற்றும் இரத்தத்தில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை உறிஞ்சி, சிறுநீர் வழியே வெளியேற்றி விடும். கொழுப்பே இல்லாத உணவாகிய மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை நன்றாக கழுவி அதனை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்தும். உடலின் உள் உறுப்புகள் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாக இருந்தாலோ கொழுப்பில்லா நல்வாழ்வு வாழலாம். சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடி வயிறு சதை குறையும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அத்துடன் முருங்கை இலைகள் சுமார் பத்து கிராம் அளவில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த முறையால் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் தொப்பை கூட குறையும்.
தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்
எண்ணையில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். தினமும் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். பாஸ்ட் ஃபுட் உணவுகள், பீட்சா, பர்கர், டின் உணவுகள், இனிப்பு பதார்த்தங்கள், ஹாட பாக்ஸில் அடைக்கப்பட்ட உணவுகள், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவான உணவை குறிப்பாக வயிறு முற்றிலும் நிரம்ப சாப்பிடாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் கழித்து தானாகவெ தாகம் எடுக்கும். அப்போது தேவையான அளவு தண்ணீர் குடித்தால் போதுமானது. இரவு நேரத்தில் எட்டு மணிக்கு மேல் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு மேல் பசி ஏற்பட்டால் ஒரு டம்ளர் பால் அல்லது சிறிது பழங்களை சாப்பிடலாம்.
இயற்கை மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் வேலையில், தாகம் எடுக்கும் போது குளிர்பானங்கள், சோடா பானங்கள் போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும். அதிலும் உணவிற்கு முன்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகள் சாப்பிடுவது, சிறிது தண்ணீர் பருகுவது மூலம் அதிக உணவு உட்கொள்வதை தவிர்த்து உடல் எடையை குறைக்கலாம். சிறிய அளவில் தானியங்கள், காய்கறிகள், சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். உணவுகளில் எண்ணை சேர்ப்பதை தவிர்த்து சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். மேற்கண்ட வழிமுறைகளில் நமது வேலைகள் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து கடைபிடித்து வந்தால் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேராமால், அழகான உடலமைப்புடன் நல்வாழ்வு வாழலாம்.
தொகுப்பு - ராஜேந்திரன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.