எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் தமிழகத்தில் குடிமராமத்து பணிக்கு அடுத்தக்கட்டமாக மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நெல்லை விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு விழா மேடையில் எம்.ஜி.ஆர். திரு உருவப்படத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன் பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றபொழுது, நானும், துணை முதலமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை மக்களிடையே எடுத்து வைத்தோம். இதில் ஸ்டாலின் என்ன குறைகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, உள்ளக்குமுறலோடு அவர் வெளிப்படுத்திய கருத்து என்னவென்று ஊடகங்கள், பத்திரிகை வாயிலாக நாம் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும். எந்தளவிற்கு அவர் விமர்சனம் செய்துள்ளார், எந்தளவிற்கு எங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பது அவருடைய உள்ளக்குமுறலில் இருந்து நாங்கள் பார்க்க முடிகிறது.
கானல்நீராகத்தான் இருக்கும்
ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் ஒன்றாக இருக்கக்கூடாது, இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று பலரின் துணையோடு அவர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். அவர் கனவு கானல்நீராகத்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகின்றேன். எவ்வளவு இன்னல்கள், துன்பங்கள் இருந்தாலும் நாங்கள் இணைந்து செயல்பட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம். இருபெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதே நம்முடைய இலட்சியம்.
அதேபோல, புயல், வெள்ளம், வறட்சி எது வந்தாலும் சரி, மக்கள் பாதிக்கப்பட்டால், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, மக்களுக்கு ஓடோடிப் போய் உதவி செய்கின்ற ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை மக்கள் உணருவார்கள். ஆகவே, இந்த இயக்கம் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இவர்களைப்போன்று, ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.
அதேபோல, இருபெரும் தலைவர்கள் எப்படி கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் திட்டப்பணிகளை எடுத்துச் சென்றார்களோ அதேபோல அம்மாவினுடைய அரசும், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கு திட்டப்பணிகளை எடுத்துச் செல்வதில் இரவு பகல் பாராமல் உழைத்து முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அரசு இந்த அரசு.
மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு
விவாசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக நீண்ட நாட்களாக விவசாயிகள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தை அம்மாவினுடைய அரசு துவக்கி, முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து, 1519 ஏரிகளில் பணிகள் துவங்கப்பட்டு இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக ரூபாய் 300 கோடி குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும். அதுமட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் எல்லாம் குடிமராமத்து திட்டத்தில் பங்குபெற்று அவர்களும் சொந்த செலவிலே ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கு உதவி செய்தார்கள். விவசாயப் பெருங்குடிமக்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆங்காங்கே ஏரி, குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு எருவாக இட்டார்கள்.
ஆகவே, இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான திட்டம். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற திட்டம். இத்திட்டம் மூலமாக, பருவமழை பொழிகின்றபொழுது கிட்டத்தட்ட 30 சதவீதம் நீர் தேங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை செறிவூட்டுவதற்காக கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி அம்மாவினுடைய அரசால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகளில் தடுப்பணை கட்டும் பணி துவங்கப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூபாய் 350 கோடி தடுப்பணை கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக ஓடைகள், ஆங்காங்கே இருக்கின்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பருவமழையில் பொழிகின்ற நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயரச் செய்வதற்கு அம்மாவினுடைய அரசு திட்டங்கள் தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அதேபோல, கல்வியிலே அம்மாவினுடைய அரசு புரட்சி கண்டுள்ளது. கடந்த ஆறாண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக கல்லூரிகளை தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில்தான் கிட்டத்தட்ட அரசு 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்குத் தந்தார்கள். ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை அம்மா உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது.
ஆக, அம்மாவினுடைய அரசு, கடந்த ஆறாண்டுகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்து கல்வித்தரத்தை உயர்த்தியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறாண்டுகால ஆட்சியில், 31 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியதின் விளைவாக, குக்கிராமத்தில் குடிசைகளில் வாழ்கின்ற மாணவ, மாணவிகள்கூட உலகப் பொது அறிவு பெறக்கூடிய விஞ்ஞானக் கல்வியை கொடுத்த ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்கள் 100-க்கு 44.3 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக் கூடியவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மை வகிக்கின்ற துறையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. கிராமப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடியவகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும், தரம்உயர்த்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மாவினுடைய அரசு வழங்கியிருக்கின்றது. சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டப்பட்ட எஃகு கோட்டை, மாபெரும் இயக்கம் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இதிலிருந்து ஒரு கல்லைக்கூட உங்களால் அசைக்க முடியாது என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள