முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் கந்து வட்டி விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

வாடிப்பட்டி,-  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மாவட்ட காவல்துறை சார்பில் கந்துவட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த போலிஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி அலங்காநல்லூரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணியில்
கொடுக்காதே கொடுக்காதே கந்துவட்டிக்கு பணம் கொடுக்காதே,
வட்டிக்கு கொடுத்து வசதியாய் இருப்பவரே சிறைவாசல் காத்திருக்கு,
வாங்காதே வாங்காதே கந்துவட்டிக்கு வாங்காதே
கந்துவட்டிக்கு வாங்கி குடியை கொடுக்காதே
கொடுங்கள் கொடுங்கள் கந்துவட்டி கொடுப்போர் மீது புகார் கொடுங்கள்
கந்துவட்டி வட்டி கொடுப்போருக்கு 3 வருடம் சிறைவாசம் முப்பதாயிரம் அபராதம் காத்திருக்கு என்ற கோசங்கள் அடங்கிய பதாகைகளுடன் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலங்து கொண்டனர். அலங்காநல்லூர் முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து பஸ்நிலையத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.
இதில் சார்பு ஆய்வாளர் அசோகன், தலைமை காவலர் போஸ், காவலர்கள் ஜெயப்பிரகாஷ், பாண்டிசெல்வம், துணைத்தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து