முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  தலைமையில்   எடுத்துக் கொள்ளப்பட்டது.
 உலக மனித உரிமைகள் நாளினை முன்னிட்டு மனித உரிமைகள் தின உறுதிமொழி :  "நான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும், பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவராக இருப்பேன்.
 அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்.
 நான்எவ்வித வேறுபாடுமின்றி, மனித உரிமைகளையும், அனைவரின் சுயமரியாதையையும் மதித்து நடப்பேன்.
 நான், என்னுடைய சொல் அல்லது செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற மாட்டேன்
 மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் எப்போதும் கடமை பற்றுறுதி மிக்கவராக இருப்பேன்" என்று ஆணையாளர் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல் அந்தந்த மண்டலங்களில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்  ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர் (கணக்கு) திரு.குமார், உதவி ஆணையாளர் (வருவாய்)  ஏ.ரெங்கராஜன், கணக்கு அலுவலர்  சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து