எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாடுகளின் உடல் நலத்திற்கும், முழு பால் உற்பத்தியை பெறுவதற்கும் கொடுக்கப்படும் தீவனம் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக மாடுகளுக்கான சமச்சீர் தீவனமென்பது உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தற்போதைய தீவன மேலாண்மையில் பெரும்பாலும் இவ்வகைப் தீவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி யாவே மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் மாடுகள், மேய்ச்சலுக்கும் அனுப்பப்படுகின்றன.
அவ்வாறு தீவனங்களைத் தனித்தனியாக கொடுப்பதற்குப் பதிலாக அனைத் தையும் ஒன்றாக கலந்து முழு கலப்புத் தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம். இந்த தீவன கலவையை சரியான அளவிலும், விகிதத்திலும் தயாரித்து அளிக்கும் போது ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும், மிகுதியையும் தவிர்க்க இயலும். எனவே, மாடுகளுக்கு முழுகலப்பு தீவனம் அனிப்பது என்பது ஒரு பயனுள்ள இலாபகரமான முறையாகும்.
முழு கலப்புத் தீவனம் என்றால் என்ன? முழு கலப்புத் தீவனம் (டி.எம்.ஆர். வுழவயட ஆiஒநன சுயவழைn) என்பது உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படும் சமச்சீர் தீவனக் கலவையாகும். முழு கலப்புத் தீவனம், மாடுகள் ஒவ்வொரு கவளம் உட்கொள்ளும்போதும் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதை அதிகபட்சம் உறுதி செய்கிறது.
முழு கலப்புத் தீவனத்தின் சிறப்புகள் என்ன?
மாடுகள் உண்ணும் ஒவ்வொரு கவள தீவனமும் உலர், பசுந்தீவனம், அடர் தீவனத்துடன் சீராக கலந்த ஓர் கலவையாகையால் அசையூண் வயிற்றில் தீவனச் செரிமானம் அதிகமாகிறது.
உலர் தீவனத்தையும் அடர் தீவனத்தையும் தனித்தனியாகக் கொடுக்கும் போது அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை மாறுபடுகின்றது. ஆனால் முழு கலப்புத் தீவனம் கொடுக்கும்போது மாடுகளின் அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை நாள் முழுவதும் சீராக நிலைப்படுத்தப்படுகிறது.
சீரான புரதமும் மாவுச்சத்தும் நார்ச்சத்துடன் அசையூண் வயிற்றில் நுண்ணுயிரிகளுக்கு ஒருசேர கிடைப்பதால் முன் இரைப்பை நொதித்தல் மேம்படுத்தப்பட்டு பசுக்களின் உற்பத்தி திறன், பாலின் தரம், உடல் நலன் சிறப்படைகிறது.
முழு கலப்பு தீவனத்தை கொடுக்கும்பேது மாடுகளுக்கு தீவனம் உட்கொண்ட உணர்வு திருப்திகரமாக இருக்கிறது. இது மேலும் தீவன எடுப்பைத் தூண்டி, பால் உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கிறது.
முழு கலப்பு தீவனத்தை தயாரிப்பது எப்படி? மாடுகளில் உடல் எடை, உடற்பருவம் (சினைக் காலம், உடல் வளர்ச்சி) மற்றும் பால் உற்பத்தியைப் பொருத்து உலர், பசுந்தீவனம், அடர்தீவனம் கலப்பு விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தீவன பொருட்களின் எடை உலர்ந்த எடையில் (நீர்சத்து முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ உலர்நிலை எடைக்கு நிகராக 5 கிலோ பசுந்தீவனம் சேர்க்கப்படவேண்டும். மிதமான பால்உற்பத்தியில் உள்ள மாடுகளுக்கு குறைந்தபட்சம் 70:30 என்ற விகிதத்திலும், அதிக பால் உற்பத்தியுள்ள மாடுகளுக்கு அதிகபட்சம் 40:60 என்ற விகிதத்திலும் உலர், பசுந்தீவனத்துடன் அடர்தீவனம் சேர்க்கப்பட வேண்டும்.
உதாரணமாக சிறையில்லாத வளர்ந்த பசுமாட்டிற்கான மாதிரி முழு கலப்புத் தீவனத் தயாரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்படும் அளவுடன் 10.20 சதவிகிதம் கூடுதல் முழு கலப்புத் தீவனம் கொடுத்து பால் உற்பத்தியை கண்காணித்து அதற்கேற்ப மாடுகளுக்குத் தேவையான சரியான தீவன அளவை பண்ணையாளர்கள் தீர்மானிக்கலாம்.
உடல் எடை (கிலோ) - 450, பால் உற்பத்தி (4மூ கொழுப்பு) (லி) -15,12,8. முழு கலப்புத் தீவன அளவு (கிலோ) – காலை -18, 16, 15. மாலை -17, 16, 14. கலப்பு விகிதம் - 62:38, 64:36, 67:33. உலர் தீவனம் + பசுந்தீவனம்) + அடர்தீவனம் - கிலோ ஒரு மாட்டிற்கு, ஒரு நாளைக்கு (21+7)+6.5, (21+5)+5.5, (21+4)+4.5, உத்தேச செலவு (கிலோவிற்கு) - ரூ. 6.12, 5.70, 5.00.
முழுநேர கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு கொடுத்தால் போதுமா? ஆம். ஊட்டச்சத்துகள் கிடைக்கும் அளவு சரியாக கணக்கிடப்பட்டால் முழு கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு போதுமானது. மேய்ச்சலும் தேவையில்லை.
முழுநேர கலப்புத் தீவனம் தயாரித்து எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்? பசுந்தீவனம் சேர்க்கும் பட்சத்தில் முழு கலப்புத் தீவனத்தை அன்றே மாடுகளுக்கு கொடுத்துவிட வேண்டும். பசுந்தீவனம் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட முழு கலப்புத் தீவனக் கட்டிகள் சில மாநிலங்களில் வணிகரீதியில் விற்கப்படுகின்றன. இதனை மாதக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
என்னென்ன பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களைச் சேர்க்கலாம்? கம்பு நேப்பியர் ஓட்டுத்தீவனம் (கோ4) போன்ற புல்வகைகள், தீவன சோளம், பயறு வகைத் தீவனங்களான தட்டைப்பயறு, வேலிம்பால் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உலர் தீவனங்களான வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றையும் சேர்க்கலாம். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் இரண்டையும் கலந்து தயாரிப்பது சிறந்தது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் சுமார் 1-3 அங்குலமுள்ள சிறு துண்டு களாக நறுக்கப்பட்டு முழு கலப்புத் தீவனம் தயாரிக்க வேண்டும். மரஇலைகளை பச்சையாகவோ உலர்த்தியோ பயன்படுத்தலாம்.
அடர்தீவனத்திற்கு பதிலாக தீவன மூலப்பொருட்களைச் சேர்க்கலாமா? ஆம். பொதுவாக அடர்தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து தீவன மூலப்பொருட் களையும் நேரடியாகவே முழு கலப்புத் தீவனத்தில் சேர்க்கலாம். அதனுடன் உப்பு மற்றும் தாதுஉப்புக் கலவையையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்?
முழு கலப்புத் தீவனத்தின் நன்மைகள் என்ன?
1. உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை தனித் தனியாக மாடுகளுக்கு கொடுக்க வேண்டியதில்லை.
2. நன்றாக கலந்த தீவனமாகையால் குறிப்பிட்ட தீவன மூலப்பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பதும், சில தீவன மூலப்பொருட்களை உண்ணா மல் விடுவதும் தவிர்க்கப்படுகிறது.
3. மாடுகளுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளிவிலான உலர் மற்றும் அடர் தீவனத்தை அவற்றின் உடல்நிலை மற்றும் உற்பத்திக்கு ஏற்றவாறு கொடுப்ப தால் தீவனம் விரையமாவது குறைகிறது.
4. பண்ணைகளில் பால் உற்பத்திக்குத் தகுந்தவாறு மாடுகளை குழுவாக பிரித்து முழு தீவனக் கலவையை அளிக்கும்போது மாடுகளின் உற்பத்திக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுகின்றன.
5. முழு கலப்பு தீவனத்தை மாடுகளுக்கு தருவதன் மூலம் மாட்டின் இனத் தினைப் பொருத்து பால் உற்பத்தி சுமார் 10 சதவிகிதம் உயர்வதாக ஆய்வு மேற்கோள்கள் தெரிவிக்கின்றன.
6. பாலில் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துகளும் சீராக இருக்கும்.
7. ஒரு நாளில் தீவனம் எடுக்கும் அளவை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தீவன செலவை குறைக்க முடியும்.
8. குறைந்த அளவிலான மரபுசாரா தீவன மூலப்பொருட்கள், தரம் மற்றும் ருசி குறைந்த தீவனப் பொருட்களை எளிதில் முழு கலப்புத் தீவனமாக மாற்றி தரலாம்.
9. அமில நோய், கீட்டோன் செறிவுநிலை அதிகரித்தல் மற்றும் மாடுகளின் நான்காம் இரைப்பை இடமாற்றம் ஆகிய நோய்கள் பெருமளவு தடுக்கப் படுகிறது.
சிரமங்கள் என்ன?
மாடுகளின் உடல் எடை மற்றும் பால் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும். நடுத்தர மற்றும் பெரிய மாட்டுப் பண்ணைகளுக்கு முழு தீவன கலவை தயாரிக்க தீவன டி.எம்.ஆர். கலவை இயந்திரம் தேவைப்படுகிறது. சிறு பண்ணைகளுக்கு குறைந்தபட்சம் உலர் மற்றும் பசுந்தீவனங்களை நறுக்கும் இயந்திரம் தேவைப்படுகிறது. வைக் கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிய பின்பு டி.எம்.ஆர். கலவை இயந்திரத்தில் சேர்க்க வேண்டும்.
தொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ¬ந.ஸ்ரீபாலாஜி, தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.


