எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பொது வாழ்வில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற விதத்திலும், தங்களது திறமைகளை வளர்க்கின்ற விதத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கலந்துரையாடல் ‘காபி வித் கலெக்டர்’ என்ற புதுமையான நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், சிப்பிக் கூடத்தில் நடைபெற்றது.
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். மாணவ, மாணவியர்களிடம் சாலை விதிகளை கடைபிடிக்கவும், அவற்றை நண்பர்களுக்கும், அண்டை வீட்டாரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஏ.எஸ்.லாவண்யா, ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:நாட்டின் வளர்ச்சியில் மாணவ, மாணவியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்கள் வாழும் அல்லது வசிக்கும் பகுதிகளில் உள்ள அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்காக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுவாக தங்களது பகுதிகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தெரியும். அத்தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதும் தெரியும், ஆனால் அவற்றை பெறுவதில் உள்ள சிரமங்கள், எந்தெந்த குறைகளுக்கு அது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை, எவ்வாறு சந்திப்பது அல்லது எவ்வாறு அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற சந்தேகங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்வார்கள். மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கபெறும் தகவல்களை தங்களது வீடுகளில் மட்டுமல்லாது, அண்டை அயலாரிடமும் தயக்கமின்றி தெரிவிப்பது, அவர்களிடம் பொது பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை செயல்படுத்த உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் எடுக்கப்படும்.
நமது மாவட்டத்தில் பருமழையின் போது கிடைக்கப்பெறும் நீர் சேகரிப்பதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையினை தேர்ந்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அறிவுரைகளை தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளை மேற்கொள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது திறமைகளையும், அறிவாற்றலையும், வாசிக்கும் வழக்கத்தையும் அதிகரிப்பதோடு, தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மைகளை அறவே நீக்கி, உங்களது தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் அடிப்படை வசதிகள், சுற்றலா பயணியர் தங்கும் விடுதி ஆகியவற்றை மேம்படுத்திடவும், சுற்றலாதலங்களுக்கு வருபவர்களுக்கு வசதியாக ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்ய ஊநவெசந- களை ஏற்படுத்தவும் மேலும், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி சுற்றுலா சென்றுவர ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என மில்லர்புரம், தி.விக்காசா பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும் ஏ.பி.சி.வி. மகாலெட்சுமி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆந்திர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயற்கை மேலாண்மை என்கின்ற இயற்கை சார்ந்த திட்டத்தின் மூலம், கால்நடை வளர்ப்பினை இயற்கை விவசாயத்தில் பயன்படுத்துவது குறித்து, நமது மாவட்டதில் உள்ள விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் எனவும், இயற்கை விவசாய முறையை நமது மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சாமுவேல்புரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நமது மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றிடும் வகையில் அதிக மரங்களை நட்டு வளர்க்கவும் அவற்றை இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி வளர்க்கவும் கேட்டுக்கொண்டனர். மேலும், முள்ளக்காடு, சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், ஒருங்கிணைப்பாளர் வட்டாட்சியர் கே.ராஜ்குமார் தங்கசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.