முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று தி.மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், தாசில்தார் ஆர்.ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறைதீர்வு கூட்டம்

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேண்டும், தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதற்கான தொகையினை உடனுக்குடன் வழங்க வேண்டும், பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறட்சி நிவாரண உதவி வழங்க அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் பேசினர். இதேபோல கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுக்கா அலுவலகங்களிலும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து