முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு அரசியல் முகவரி கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் நடிகர் கருணாஸ் பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -எனக்கு அரசியல் முகவரி கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று திண்டுக்கல்லில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகிலுள்ள மாரம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். இதனால் எனக்கு உறவினர்கள் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அதன்பின் சினிமாவில் வாய்ப்பு தேடி ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டேன். எனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக இட ஒதுக்கீடு அறிவித்து அவர்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்தினார். அவருக்கு நன்றி தெரிவிக்க நான் சென்ற போது என்னை திருவாடானை தொகுதி வேட்பாளராக போட்டியிடுமாறு கூறினார். அப்போது என் கையில் வெறும் ரூ.1500 மட்டுமே இருந்தது. எனது நிலையை நான் கூறியபோது நீங்கள் போட்டியிடுங்கள், நான் வெற்றி பெற வைக்கிறேன் என்றுதெரிவித்தார். அவர் சொன்னது போலவே என்னை இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார். அவர் தான் எனக்கு அரசியல் முகவரி கொடுத்தவர்.
ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் தினந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. இருப்பினும் என்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்காக நான் நியாயமாக நடந்து கொண்டு வருகிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு கிடைத்த வெற்றி அரசியல் கட்சியினரை மட்டுமின்றி தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அடுத்து வரவுள்ள தேர்தல்களில் எனது நிலை குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. ஆனால் எனது சினிமா கவனம் இனி வரும் காலங்களில் தீவிரம் அடையும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து