முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழிப்புணர்வு சுவர் சித்திரம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரில் திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில்  தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சுவர் சித்திரம் வரைதல் போட்டி  நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. பரிசு மற்றும் கேடயங்கள் சரக்கு மற்றும் சேவை வரி இணை ஆணையர் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி,  கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்  மற்றும் பரிசு வழங்கினார்.பின்னர் கலெக்டர்  பேசியதாவது:-திருநெல்வேலி மாநகராட்சி ஏற்கனவே தூய்மையான மாநகராட்சிக்கான விருது பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தூய்மையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து உங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திட இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவர் பகுதி பேஸ்டர்கள் ஒட்டப்பட்டு சுகாதாரமின்றி இருந்தது. இச்சுவர் சித்திர போட்டியின் மூலம் விழிப்புணர்வு கருத்துகள் மிக அழகாக வரையப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் சிறப்பாக விழிப்புணர்வு ஒவியங்களை வரைந்துள்ளீர்கள். நீங்கள் கூறியுள்ள கருத்துகளை நீங்களும் கடைபிடித்து உங்களது பள்ளி, வீடு மற்றும் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான பராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என பேசினார்.தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி இணை ஆணையர் நரேஷ்,இ.வ.ப.,  தலைமையில் கலெக்டர்  முன்னிலையில் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கண்ணன், துணை முதல்வர் மரு.ரேவதி, சுகாதார அலுவலர்கள் சுப்பிரமணி, சாகுல்அமீது, முருகேசன், சுகாதார ஆய்வாளர் நடராஜன், இளங்கோ  மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து