எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசே காப்பீடு தொகையை செலுத்துவதால் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி பெருமிதம் கொண்டார்.
தரிசனம்
புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது கோவில் தர்மகர்த்தா பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்று பூரண கும்ப மரியாதையான தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் சாமித்தோப்பிலுள்ள அன்புவனத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மண்டபத்தில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், கூடன்குளம் அணுமின் உலை ஆரம்பிக்கும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் என்னை அழைத்து கூடன்குளத்தில் அணுமின் உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டு கெண்டனர். இதையடுத்து நான் கூடன்குளம் வந்து போராட்டக்காரர்களை அழைத்து பேசி கூடன்குளம் அணுமின் நிலையம் அமைய நடவடிக்கைகள் மேற்கொண்டேன். உற்பத்தியாகும் 1600 மெகா வாட் மின்சாரத்தில் ஒரு யூனிட் 90 பைசாவில் கிடைக்கிறது. தற்போது 2வது உலையும் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலை உருவாகும். இன்னும் புதிதாக 4 உலைகள் வர இருக்கின்றன. கூடன்குளம் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொண்டேன். திருவனந்தபுரத்திலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தை போல மகேந்திரகிரியில் இஸ்ரோவின் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டு கொண்டார். தொடர்ந்து சாமித்தோப்பு அய்யா வைகுண்டப்பதி தர்மகர்த்தாவான பாலபிரஜாபதி அடிகளாருக்கு ‘மடாதிபதி’ என்ற பட்டமும், செங்கோல் ஒன்றும் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவையில் கடந்த 2 வருடங்களாக வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் கூட்டுக்கடனை ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பயிர் காப்பீட்டுத் தொகையையும் மாநில அரசே வழங்கியது. ஆகவே தான் புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை. புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டப் பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், எங்கள் அதிகாரத்தில் பல இடையூறுகள் இருந்த போதும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியும், மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பதும், தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், புதுவை மாநிலத்துக்கு 1850 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். டெல்லி நாட்டின் தலைநகராக இருந்தாலும் சட்டம், ஒழுங்கு, நிதி, நிர்வாகம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையையும், டெல்லியையும் ஒன்றாக இணைத்து இப்போது உள்ள பாஜக அரசு பார்க்கிறது. கெஜ்ரிவாலை போன்று என்னையும் பார்க்கிறார்கள். நான் வேறு என்று அவர்களுக்கு புரியவில்லை. புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் விடப்பட்டுள்ளது. இதுபோல் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற அவர், விஜயதரணி எம்.எல்.ஏ குறித்த கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் புதிய கட்சிகள் ஆரம்பிக்க உள்ளனர். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கவும், தேர்தலில் போட்டியிடவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை, என்றார் அவர். புதுச்சேரி முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மகேஷ் லாசர், வட்டார தலைவர் ராஜஜெகன், விவேகானந்தா கல்லூரி தலைவர் துரைசாமி, செயலாளர் ராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், சாமித்தோப்பு பதியை சார்ந்த தர்மகர்த்தாக்கள் வக்கீல் பால ஜனாதிபதி, லோகாதிபதி, பையன்ராஜா, லோக் பாலபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
தமிழகம் முழுவதும் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்..!
28 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.



