எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசே காப்பீடு தொகையை செலுத்துவதால் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி பெருமிதம் கொண்டார்.
தரிசனம்
புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது கோவில் தர்மகர்த்தா பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்று பூரண கும்ப மரியாதையான தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் சாமித்தோப்பிலுள்ள அன்புவனத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மண்டபத்தில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், கூடன்குளம் அணுமின் உலை ஆரம்பிக்கும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் என்னை அழைத்து கூடன்குளத்தில் அணுமின் உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டு கெண்டனர். இதையடுத்து நான் கூடன்குளம் வந்து போராட்டக்காரர்களை அழைத்து பேசி கூடன்குளம் அணுமின் நிலையம் அமைய நடவடிக்கைகள் மேற்கொண்டேன். உற்பத்தியாகும் 1600 மெகா வாட் மின்சாரத்தில் ஒரு யூனிட் 90 பைசாவில் கிடைக்கிறது. தற்போது 2வது உலையும் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலை உருவாகும். இன்னும் புதிதாக 4 உலைகள் வர இருக்கின்றன. கூடன்குளம் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொண்டேன். திருவனந்தபுரத்திலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தை போல மகேந்திரகிரியில் இஸ்ரோவின் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டு கொண்டார். தொடர்ந்து சாமித்தோப்பு அய்யா வைகுண்டப்பதி தர்மகர்த்தாவான பாலபிரஜாபதி அடிகளாருக்கு ‘மடாதிபதி’ என்ற பட்டமும், செங்கோல் ஒன்றும் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவையில் கடந்த 2 வருடங்களாக வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் கூட்டுக்கடனை ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பயிர் காப்பீட்டுத் தொகையையும் மாநில அரசே வழங்கியது. ஆகவே தான் புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை. புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டப் பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், எங்கள் அதிகாரத்தில் பல இடையூறுகள் இருந்த போதும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியும், மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பதும், தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், புதுவை மாநிலத்துக்கு 1850 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். டெல்லி நாட்டின் தலைநகராக இருந்தாலும் சட்டம், ஒழுங்கு, நிதி, நிர்வாகம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையையும், டெல்லியையும் ஒன்றாக இணைத்து இப்போது உள்ள பாஜக அரசு பார்க்கிறது. கெஜ்ரிவாலை போன்று என்னையும் பார்க்கிறார்கள். நான் வேறு என்று அவர்களுக்கு புரியவில்லை. புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் விடப்பட்டுள்ளது. இதுபோல் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற அவர், விஜயதரணி எம்.எல்.ஏ குறித்த கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் புதிய கட்சிகள் ஆரம்பிக்க உள்ளனர். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கவும், தேர்தலில் போட்டியிடவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை, என்றார் அவர். புதுச்சேரி முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மகேஷ் லாசர், வட்டார தலைவர் ராஜஜெகன், விவேகானந்தா கல்லூரி தலைவர் துரைசாமி, செயலாளர் ராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், சாமித்தோப்பு பதியை சார்ந்த தர்மகர்த்தாக்கள் வக்கீல் பால ஜனாதிபதி, லோகாதிபதி, பையன்ராஜா, லோக் பாலபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.