எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.
சி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.
பலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.
இத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.
தமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம


