எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 புதிய நீதிமன்றங்கள் மற்றும் இரணியலில் கூடுதல் உரிமையியல் நீதிபதி குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் இந்திராபானர்ஜி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திறந்து வைத்தார். இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நீதிமன்றங்கள் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் இன்று ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவுநீதிமன்றம்), ஒரு குடும்பநல நீதிமன்றம், ஒரு கூடுதல் மகளிர் நீதிமன்றம், பத்மநாபபுரம் நகரில் இரண்டாவது குற்றவியர் நடுவர் நீதிமன்றம், இரணியல் நகரில் ஒருவிரைவு நீதிமன்றம் ஆகிய 5 புதிய நீதிமன்றங்கள் துவக்க விழா மற்றும் இரணியல் கூடுதல் உரிமையியல் நீதிபதிக்கான புதிய குடியிருப்பு திறந்து வைக்கப்படும் விழாஆகிய 6 விழாக்களும் ஒன்று சேர நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத தொடரில் புரட்சித்தலைவி அம்மா 25.09.2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்பட 10 இடங்களில் மாவட்ட நீதிபதி பதவி தரத்தில், 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5.32 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பத்மநாபபுரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.இவ்வறிவிப்புகளை தொடர்ந்து 28.12.2015 அன்று நாகர்கோவிலில் ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 9 பணியாளர்களுடன் ரூ.103.6 இலட்சம் செலவில் உருவாக்கவும், அதுபோன்று 23.12.2015 அன்று பத்மநாபபுரத்தில் ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் ரூ.67.66 இலட்சம் செலவில் உருவாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26.12.2016 அன்று 4 கட்டங்களாக 15 குடும்ப நல நீதிமன்றங்களை ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 23 பணியாளர்களுடன் ரூ.19.46 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிடப்பட்டது.கடந்த 05.04.2017 அன்று 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை 2 கட்டங்களாக ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 7 பணியாளர்களுடன் ரூ.6.61 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிட்டது. அதுபோன்று கடந்த 22.04.2016 ஆம் ஆண்டு இரணியல் நகரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நிதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்கியிருப்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் அமையவிருந்த இரண்டாவது விரைவு நீதிமன்றத்தை இரணியலுக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டது. இவ்வாணைகளை தொடர்ந்து இன்று இந்த 5 நீதிமன்றங்களும் தொடங்கி வைக்கப்படுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், 25.05.2015 அன்று இரணியலில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களுக்கு ரூ.14.11 இலட்சம் செலவில் குடியிருப்பு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையை தொடர்ந்து அந்த குடியிருப்பு கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமில்லாமல் இப்புதிய 5 நீதிமன்றங்களும் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மற்றும் நீதிபதிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை. இதற்காக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களுக்கும், மாண்புமிக தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 நீதிமன்றங்கள் நாகர்கோவிலிலும், 6 நீதிமன்றங்கள் குழித்துறையிலும், 4 நீதிமன்றங்கள் பத்மநாபபுரத்திலும், 2 நீதிமன்றங்கள் இரணியலிலும், 1 நீதிமன்றங்கள் பூதப்பாண்டியிலும் இயங்கி வருகின்றன. இந்த 28 நீதிமன்றங்களும் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் நீதி நிர்வாகத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து 2 வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தற்பொழுது அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வரசு தமிழகத்தில் பல புதிய நீதிமன்றங்கள் உருவாக்கவும், நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கவும், புதிய பணியிடங்கள் உருவாக்கவும், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.659.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை ரூ.72.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உருவாக்க ஆணை பிறப்பித்தார்கள். இவ்வாறு உருவாக்க ஆணையிடப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 5 நீதிமன்றங்கள் தொடங்க அம்மா ஆணையிட்டிருந்தார்கள். அம்மாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்த அரசு இதுவரை 197 புதிய நீதிமன்றங்களை ரூ.122.63 கோடி செலவில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பித்து சாதனையை புரிந்துள்ளது. இவைகளில் 4 நீதிமன்றங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடங்கும். அதில் 2 நீதிமன்றங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சார்பு நீதிமன்றங்கள் 18 (நாகர்கோவில்), கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் 11, கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் 18, மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் 6, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் 20 (நாகர்கோவில்), குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 15 (நாகர்கோவில்), தாலுக்கா நீதிமன்றங்கள் 51 மற்றும் 54 சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும்.மிழகத்தில் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களான, 4 விடுமுறைகால குடும்பநல நீதிமன்றங்களும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு அசல் மனு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் மொத்தம் 32 உள்ளது. ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க அமைந்துள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்களும், மகளிர் நீதிமன்றங்கள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றங்களில் நாமக்கல் உட்பட 22 நீதிமன்றங்களும், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் மகளிர் நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளதால், இத்தகைய குற்றங்கள் உடனடியாக தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.7 கோடிசெலவில் நிறுவப்பட்டது.இன்று தமிழகத்தில் 88 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றது. புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பது, நீதிபதிகளக்கான குடியிருப்புகள், கூடுதல் கட்டிடங்கள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த ஆட்சியில் ரூ.636.36 கோடி மதிப்பிலான 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்க வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு மிக விரைவில் நனவாகும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் விமலா, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சேஷசாயி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கருப்பையா, கூடுதல் ஆட்சியர் ராஹ_ல்நாத் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (திருநெல்வேலி) ஆசை தம்பி, வருவாய் கோட்டாட்சியர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.