எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெய் ;(Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், நறுமணத்தையும் கொண்டது - நெய்;. தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும் போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது.
நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும். நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெய்யிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது.
ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துக்கள் கிடையாது. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
உணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். நெய்யை வளரும் குழந்தைகளுக்கு அதிகம் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
நெய்யில் ஆண்டி – ஆக்ஸிடென்ட்கள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும். வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றாலே அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.
பொதுவாக பலர் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு. ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதுபோன்று நெய்யில் உள்ள பல நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போமா>
நெய்யை எப்படி தயாரிப்பது?
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
நெய்யின் நன்மைகள்
குடற்புண் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
நெய்யில்லா உணவு பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதை பற்றி முதலில் அறிவோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் நெய்யை ரசாயனம் என்றே அழைக்கிறார்கள். முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரஸ் நோய்களைத் தடுக்கிறது.
நெய்யில் CLA- Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக். நெய்யில் SATURATIED FAT – 65%
MONO – UNSATURATED FAT – 32%
LINOLEIC - UNSATURATED FAT – 3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி…
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.¬¬மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த கபத்தின் சீற்றங்களை குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். ஞாபக சக்தியை தூண்டும். சரும பளபளப்பாக இருக்கும். கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண்பார்வை தெளிவடையச் செய்யும்.
சிலர் எப்போதும் உடல் சோர்வுடன் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாக கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சக்தியிமையே. இதற்கு தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் கொண்டவர்கள், பசியின்மையால் அவதியுறுபவர்கள், சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாக இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியை தூண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


