எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் புயல் சின்னம் நாளை உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 7 நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதனால், தீபாவளியன்றும் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா செய்தியாளர்களின் சந்திப்பில் நேற்று கூறும்போது, தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 21-ம் தேதி, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
இதனால், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீச கூடும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 21-ம் தேதி காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என கூறியுள்ளார். 24-ம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும். இடி, மின்னலின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இன்று வட கிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 6 நாடகளுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து அவர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை (அக்., 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி முதல் தற்போது வரை 14 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இயல்பை விட இது 58 சதவீதம் அதிகம் ஆகும். நெல்லை மாவட்டத்தில் 254 சதவீதம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட அதிகம். 23 முதல் 25 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 19 மற்றும் 24 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வருகிற 24-ம் தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேலும் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 21-ம் தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய உள்ளது. இது 22-ம் தேதியில் இருந்து 25-ம் தேதிக்குள் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இரண்டாம் சுற்று பருவமழை தீவிரமடையும். சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான வடகடலோர பகுதிகள், காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பைசன் திரை விமர்சனம்
19 Oct 2025சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Oct 2025தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.