எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று மாலை தேவகோட்டையில் துவங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பேரவையின் மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சைக்கிள் பிரச்சார பேரணி மேற்கொள்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணியை மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் கடந்த 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அம்மா திடலில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணியாக புறப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மீண்டும் துவங்கிய இடமான அம்மா திடலை அடைந்து நிறைவு பெற்றது. இந்த சாதனை விளக்க சைக்கிள் பயணத்தின் போது தொகுதி வாரியாக நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு தலைமையேற்று சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சைக்கிள் பிரச்சார பேரணி செல்லும் வழியில் பல இடங்களில் குடிமராமத்து பணி, கோவில் குளங்கள் தூர்வாறும் பணியிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 2-வது கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று 4 - ம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆயிரம் இளைஞர்களுடன் அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் துவங்குகிறது. சைக்கிள் பேரணி துவக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு பேரணியில் கலந்து கொள்ளும் ஆயிரம் இளைஞர்களும் தேவகோட்டையில் தங்குகிறார்கள்.
மறுநாள் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேவகோட்டையில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புறப்பட்டு கண்டதேவி, சண்முகநாதபுரம், ஆராவயல், அமராவதி புதூர், ரஸ்தா வழியாக காரைக்குடி நகரை நண்பகலில் சென்றடைகிறது. காரைக்குடி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிறது. இதில் சைக்கிள் பேரணியாக செல்லும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்கள். பின்னர் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சைக்கிள் பிரச்சார பேரணி திருப்பத்தூர் நகரை மாலையில் வந்தடைகிறது. அங்கு இரவில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவில் திருப்பத்தூரில் தங்குகிறார்கள்.
ஆகஸ்ட் 6 - ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி புறப்பட்டு திருக்கோஷ்டியூர், ஏரியூர் விளக்கு,மதகுபட்டி, ஓக்கூர், சோழபுரம், காஞ்சிரங்காள் வழியாக சிவகங்கை நகரை நண்பகலில் சென்றடைகிறது . அங்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் சைக்கிள் பயண இளைஞர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து அன்று மாலை சைக்கிள் பேரணி சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மானாமதுரை சிப்காட் வழியாக மானாமதுரை பேரூராட்சியை வந்தடைகிறது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவிற்கு பின்னர் மானாமதுரையில் இருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பார்த்திபனூரை சென்றடைகிறது. அங்கு இரவில் சைக்கிள் பயண இளைஞர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.