எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று மாலை தேவகோட்டையில் துவங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பேரவையின் மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சைக்கிள் பிரச்சார பேரணி மேற்கொள்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணியை மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் கடந்த 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அம்மா திடலில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணியாக புறப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மீண்டும் துவங்கிய இடமான அம்மா திடலை அடைந்து நிறைவு பெற்றது. இந்த சாதனை விளக்க சைக்கிள் பயணத்தின் போது தொகுதி வாரியாக நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு தலைமையேற்று சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சைக்கிள் பிரச்சார பேரணி செல்லும் வழியில் பல இடங்களில் குடிமராமத்து பணி, கோவில் குளங்கள் தூர்வாறும் பணியிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 2-வது கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று 4 - ம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆயிரம் இளைஞர்களுடன் அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் துவங்குகிறது. சைக்கிள் பேரணி துவக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு பேரணியில் கலந்து கொள்ளும் ஆயிரம் இளைஞர்களும் தேவகோட்டையில் தங்குகிறார்கள்.
மறுநாள் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேவகோட்டையில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புறப்பட்டு கண்டதேவி, சண்முகநாதபுரம், ஆராவயல், அமராவதி புதூர், ரஸ்தா வழியாக காரைக்குடி நகரை நண்பகலில் சென்றடைகிறது. காரைக்குடி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிறது. இதில் சைக்கிள் பேரணியாக செல்லும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்கள். பின்னர் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சைக்கிள் பிரச்சார பேரணி திருப்பத்தூர் நகரை மாலையில் வந்தடைகிறது. அங்கு இரவில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவில் திருப்பத்தூரில் தங்குகிறார்கள்.
ஆகஸ்ட் 6 - ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி புறப்பட்டு திருக்கோஷ்டியூர், ஏரியூர் விளக்கு,மதகுபட்டி, ஓக்கூர், சோழபுரம், காஞ்சிரங்காள் வழியாக சிவகங்கை நகரை நண்பகலில் சென்றடைகிறது . அங்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் சைக்கிள் பயண இளைஞர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து அன்று மாலை சைக்கிள் பேரணி சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மானாமதுரை சிப்காட் வழியாக மானாமதுரை பேரூராட்சியை வந்தடைகிறது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவிற்கு பின்னர் மானாமதுரையில் இருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பார்த்திபனூரை சென்றடைகிறது. அங்கு இரவில் சைக்கிள் பயண இளைஞர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
12 Sep 2025சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.