முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ராகுல் பங்கேற்பா? அழைப்பு வந்த பிறகே பதில் என்கிறார் சிங்வி

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு ராகுல் காந்தியை அழைக்கும் திட்டம் பற்றி தெரிவித்துள்ள காங்கிரஸ், அந்த அமைப்பிலிருந்து அழைப்பிதழ் வந்த பிறகுதான் இதுகுறித்துப் பதில் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவிக்கையில்,

கற்பனையான யூக கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிடும்படியான எந்த அழைப்பையும் நாங்கள் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பிதழ் ஏதாவது வந்தால் மட்டும் இதுகுறித்து உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது நிச்சயமாக முறையான பதில் கிடைக்கும். அப்போது உங்கள் அனைவருக்கும் அந்தப் பதில் பகிரப்படும் என்றார்.

டெல்லி விக்யான் பவனில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும், எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உரையாற்றுவதாகவும், இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கொள்கை கொண்ட தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் மற்ற மத தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து