முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்நிலை ஆக்ரமிப்பு என்பது கொடுங்குற்றம்; பட்டா தர உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  நீர்நிலை ஆக்ரமிப்புகள் கொடுங்குற்றம், ஆக்ரமித்த நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் குளத்தை ஆக்ரமித்து வீடு கட்டியவர்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலை ஆக்ரமிப்பு கொடுங்குற்றம். நீர்நிலைகளை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் ஆக்ரமிப்பு இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும், நீர்நிலைகள் ஆக்ரமிப்புகள் குறித்து 2 வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி 8 வாரத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற வேண்டும். ஆக்ரமிப்புகளை அகற்றும் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சென்னை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அக்ரமிப்புகளை அகற்றுவதுதான் அதிகாரிகளின் முக்கிய வேலை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், வெள்ளம் ஏற்படும் போது, நீர்நிலை ஆக்ரமிப்பாளர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்றும் வருவாய்த் துறை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து