முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்த் போராட்டத்தில் வன்முறை:ம.பி.யில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய காங். தொண்டர்கள்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

உஜ்ஜைன்,பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். பீகாரில் வாகனங்கள் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைந்தன.

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றுக்குள் நுழைந்தனர். பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து