முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி அருகே மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி, -    போடியில், பள்ளி அருகே மதுபாட்டில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     மிலாடி நபியை முன்னிட்டு புதன் கிழமை அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் போடி பெரியாண்டவர் கோவிலை அடுத்து பள்ளி அருகே மது பாட்டில்கள் விற்பனை  செய்வதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில் போடி குலாலர்பாளையம், வாமணன் தெருவை சேர்ந்த செல்வம் (58) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்,  கஞ்சா ஆகியவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.     இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது 250 மது பாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை இருந்துள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மது பாட்டில்கள் மற்றும்  கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து