எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம், சேலம் மாநகரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடை, கடையாய் ஏறி இறங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கடை வீதியில்...
சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாநகரில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். சேலம் பட்டக்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் அங்கிருந்து நடந்து சென்று சின்னக்கடை வீதி,பெரியக்கடை வீதி வழியாக சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் வரை சுமார் 2 கி.மீ தூரம் வரை அவர் கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக நடந்து சென்று சின்னக்கடை வீதி மற்றும் பெரிய கடை வீதியில் இருபுறம் உள்ள கடைகள்,வியாபார நிறுவனங்கள், கடைகளில் வியாபாரத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், சாலையோர கடைகள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் கொடுத்து வாக்குகள் சேகரித்தார். சாலையின் இருபுறமும் உள்ள அனைத்து கடைகளிலும் அவர் ஏறி இறங்கி வாக்குகள் சேகரித்தார்.
பலத்த பாதுகாப்பு...
தமிழக முதல்வர் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் அவர் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் எப்படி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் பரபரப்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவானோ அந்த அளவிற்கு கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தாமல் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
டீ சாப்பிட்ட முதல்வர்
அவரை தொடர்ந்து தொண்டர்களும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.. அப்போது சின்னக்கடை வீதி ராஜாஜி காதிபவன் எதிரே உள்ள டீக்கடை ஒன்றி்ல் திடீரென வாக்கு சேகரித்த முதல்வர் அந்த டீக்கடையில் பொதுமக்களோடு, பொதுமக்களாய் அமர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் அங்கு அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்ற அவர் சின்னகடை வீதி வேணுகோபால சுவாமி திருக்கோவிலின் அர்ச்சனை பிரசாதத்தையும் ஏற்றுக் கொண்டார்.
காலில் விழுந்து...
அதைத்தொடர்ந்து நடந்து சென்றே வாக்கு சேகரித்த அவர் 80 வயதிற்கும் மேற்பட்ட பாட்டி ராஜாஜி காதிபவன் கடை வாசலில் பொதுமக்களோடு, பொதுமக்களையாய் முதல்வரை பார்க்க நின்று கொண்டிருந்தார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க ஆர்வமாக நின்று கொண்டிருந்த பாட்டியை பார்த்த முதல்வர் நேரடியாக பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்று துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனன் அந்த பாட்டியின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து அவர் பெரியகடை வீதிகளிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையம் அருகில் உள்ள கன்னகிகா பரமேஸ்வரி கோவில் அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
நிர்வாகிகள்...
முதல்வருடன் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன்,பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம்,தியாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ஆர்.ஆர். அய்யப்பமணி, மகளிர் அணி செயலாளர் ஜமுனா ராணி, அண்ணா போக்குவரத்து மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள்,நகர செயலாளர் கதிர் ராசரத்தினம்,தே.மு.தி.க. மாநகர செயலாளர் இராதா கிருஷ்ணன்,பாஜக மாநகர தலைவர் கோபிநாத், எம்.எல்.ஏ.க்கள்,முன்னாள் ,எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேர்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு