எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், சேலம் மாநகரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடை, கடையாய் ஏறி இறங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கடை வீதியில்...
சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாநகரில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். சேலம் பட்டக்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் அங்கிருந்து நடந்து சென்று சின்னக்கடை வீதி,பெரியக்கடை வீதி வழியாக சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் வரை சுமார் 2 கி.மீ தூரம் வரை அவர் கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக நடந்து சென்று சின்னக்கடை வீதி மற்றும் பெரிய கடை வீதியில் இருபுறம் உள்ள கடைகள்,வியாபார நிறுவனங்கள், கடைகளில் வியாபாரத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், சாலையோர கடைகள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் கொடுத்து வாக்குகள் சேகரித்தார். சாலையின் இருபுறமும் உள்ள அனைத்து கடைகளிலும் அவர் ஏறி இறங்கி வாக்குகள் சேகரித்தார்.
பலத்த பாதுகாப்பு...
தமிழக முதல்வர் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் அவர் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் எப்படி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் பரபரப்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவானோ அந்த அளவிற்கு கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தாமல் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
டீ சாப்பிட்ட முதல்வர்
அவரை தொடர்ந்து தொண்டர்களும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.. அப்போது சின்னக்கடை வீதி ராஜாஜி காதிபவன் எதிரே உள்ள டீக்கடை ஒன்றி்ல் திடீரென வாக்கு சேகரித்த முதல்வர் அந்த டீக்கடையில் பொதுமக்களோடு, பொதுமக்களாய் அமர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் அங்கு அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்ற அவர் சின்னகடை வீதி வேணுகோபால சுவாமி திருக்கோவிலின் அர்ச்சனை பிரசாதத்தையும் ஏற்றுக் கொண்டார்.
காலில் விழுந்து...
அதைத்தொடர்ந்து நடந்து சென்றே வாக்கு சேகரித்த அவர் 80 வயதிற்கும் மேற்பட்ட பாட்டி ராஜாஜி காதிபவன் கடை வாசலில் பொதுமக்களோடு, பொதுமக்களையாய் முதல்வரை பார்க்க நின்று கொண்டிருந்தார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க ஆர்வமாக நின்று கொண்டிருந்த பாட்டியை பார்த்த முதல்வர் நேரடியாக பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்று துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனன் அந்த பாட்டியின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து அவர் பெரியகடை வீதிகளிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையம் அருகில் உள்ள கன்னகிகா பரமேஸ்வரி கோவில் அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
நிர்வாகிகள்...
முதல்வருடன் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன்,பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம்,தியாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ஆர்.ஆர். அய்யப்பமணி, மகளிர் அணி செயலாளர் ஜமுனா ராணி, அண்ணா போக்குவரத்து மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள்,நகர செயலாளர் கதிர் ராசரத்தினம்,தே.மு.தி.க. மாநகர செயலாளர் இராதா கிருஷ்ணன்,பாஜக மாநகர தலைவர் கோபிநாத், எம்.எல்.ஏ.க்கள்,முன்னாள் ,எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேர்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.