முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசி தரூரை சந்திக்கும் முன்பு யாருக்கும் தெரிவிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சசி தரூரை சந்திக்க போகும் முன்பு யாரிடமும் எந்த தகவலையும் தான் தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

தரூருக்கு விபத்து

கேரள கோவில் ஒன்றில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுக்க துலாபாரத் தராசில் அமர்ந்தபோது காங்கிரஸ் பிரமுகர் சசி தரூருக்கு விபத்து ஏற்பட்டது. துலாபாரத்தராசு அறுந்து விழுந்ததில் சசி தரூர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவ்வேளையில் கேரள மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பரப்புரைக்கு இடையே மருத்துவமனையிலுள்ள காங் எம்பி சசி தரூரை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இது குறித்து ட்வீட் செய்த சசி தரூர், ''இந்திய அரசியலில் இந்தப் பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக இவரைப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார். கட்சி பாகுபாடு பார்க்காமல் சசி தரூரை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தெரியபடுத்தவில்லை

இந்நிலையில் சசி தரூரை தான் பார்க்க செல்லும் தகவலை யாருக்குமே தெரியபடுத்தவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ள அவர், ''சசி தரூர் அடிபட்ட தகவல் கிடைத்தவுடனேயே அவரை சந்திக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். விமான நிலையத்துக்கு திரும்பும் போது அவரை சந்திக்க திட்டமிட்டேன். அவருடனான சந்திப்பு குறித்து யாரிடமும் நான் தகவல் தெரிவிக்கவில்லை. என் கட்சி நிர்வாகிகளுடன் கூட நான் எதுவும் சொல்லவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து