எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுடெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5 ஆயிரத்து 398 கோடி நிதி உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர்களுடன்...
நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் மற்றும் தூய்மை பாரதம் திட்டங்கள் குறித்த மாநில அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஅங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழகம் நாட்டிலேயே பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதையும் மத்திய அரசின்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே 2017-18-ம் ஆண்டிற்கான நடவடிக்கைகளுக்கு ரூ.560.15 கோடி வழங்க வேண்டும் என்றும், 2018-19-ம் ஆண்டில் 14 வது நிதிக்கமிஷன் அறிவித்தப்படி ஊரக, புறநகர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது தவணை அடிப்படை மானியமாக ரூ1,608.03 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விமான நிலையம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 லட்சம் வீடுகள் கட்டி வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கோயமுத்தூர் விமானநிலைய விரிவாகக்கம் தொடர்பாக 627 .89 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. அதில் 365 ஏக்கர் மட்டுமே விரிவாக்கத்திற்கு விமானநிலைய ஆணையம் பயன்படுத்த மறுஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்காக கையகப்படுத்தப்பட்ட 627.89 ஏக்கர் நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன். விமானநிலைய விரிவாக்கம் நிறைவடைந்தால் விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தனது அமித்ஷாவுக்கு அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னையில்...
அதே போல் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி, நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் ஆகியோரையும் சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் அளித்த மனுவில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டும் வழக்கத்திற்கு மாறாக 24 சதவீதத்திற்கும் குறைவான மழையே பொழிந்துள்ளது. பருவமழை பொய்த்தததன் காரணமாக குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் சவாலை சந்திக்க நேர்ந்துள்ளது. சென்னையில் குடிநீர்வழங்க இரண்டு மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.7337.78 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1,800 கோடி...
இந்த திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாள்தோறும் 550 எம்.எல்.டி. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழ்நாட்டின் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற ரூ.5,398 கோடி நிதி உதவி வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் திண்டிவனம், மரக்காணம் - விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் 16.78 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க கடல் நீரில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் 10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,800 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமில்லாமல் மழைநீர் சேமிப்புத் திட்டத்திற்காகவும் மத்திய நிதி உதவியை கோரி அவர் கடிதமளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா


