எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுடெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5 ஆயிரத்து 398 கோடி நிதி உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர்களுடன்...
நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் மற்றும் தூய்மை பாரதம் திட்டங்கள் குறித்த மாநில அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஅங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழகம் நாட்டிலேயே பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதையும் மத்திய அரசின்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே 2017-18-ம் ஆண்டிற்கான நடவடிக்கைகளுக்கு ரூ.560.15 கோடி வழங்க வேண்டும் என்றும், 2018-19-ம் ஆண்டில் 14 வது நிதிக்கமிஷன் அறிவித்தப்படி ஊரக, புறநகர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது தவணை அடிப்படை மானியமாக ரூ1,608.03 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விமான நிலையம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 லட்சம் வீடுகள் கட்டி வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கோயமுத்தூர் விமானநிலைய விரிவாகக்கம் தொடர்பாக 627 .89 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. அதில் 365 ஏக்கர் மட்டுமே விரிவாக்கத்திற்கு விமானநிலைய ஆணையம் பயன்படுத்த மறுஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்காக கையகப்படுத்தப்பட்ட 627.89 ஏக்கர் நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன். விமானநிலைய விரிவாக்கம் நிறைவடைந்தால் விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தனது அமித்ஷாவுக்கு அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னையில்...
அதே போல் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி, நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் ஆகியோரையும் சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் அளித்த மனுவில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டும் வழக்கத்திற்கு மாறாக 24 சதவீதத்திற்கும் குறைவான மழையே பொழிந்துள்ளது. பருவமழை பொய்த்தததன் காரணமாக குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் சவாலை சந்திக்க நேர்ந்துள்ளது. சென்னையில் குடிநீர்வழங்க இரண்டு மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.7337.78 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1,800 கோடி...
இந்த திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாள்தோறும் 550 எம்.எல்.டி. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழ்நாட்டின் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற ரூ.5,398 கோடி நிதி உதவி வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் திண்டிவனம், மரக்காணம் - விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் 16.78 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க கடல் நீரில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் 10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,800 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமில்லாமல் மழைநீர் சேமிப்புத் திட்டத்திற்காகவும் மத்திய நிதி உதவியை கோரி அவர் கடிதமளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


