எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடிக்கல்...
காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முதல்வராக அம்மா இருந்த காலகட்டத்திலே, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், சென்னை மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே, நெம்மேலியில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அம்மா அறிவித்ததின் அடிப்படையில், அம்மாவினுடைய அரசும் தொடர்ந்து இதை நடைமுறைப்படுத்துவதற்காக, ஒப்பந்தம் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அம்மாவினுடைய அருளாசியோடு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நடவடிக்கை...
அம்மா அறிவித்த மற்றொரு திட்டம், பேரூரில், 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். அந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவதற்கு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒப்பந்த காலத்திற்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டில் இந்தப் பணிகள் நிறைவு பெற்று, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறுகின்ற பொழுது, சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- கடலோர மாவட்டங்களில் இதே போன்று கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் :- வறட்சியான கடலோர மாவட்ட பகுதிகளில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலமாக, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த அரசு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
கேள்வி:- குடிநீர் பணிகளுக்காக மத்திய அரசிடம் ஏதாவது நிதி கோரியிருக்கிறீர்களா?
பதில்:- ஏற்கனவே வறட்சிக்குத் தேவையான நிதி கேட்டிருக்கிறோம்.
கேள்வி:- ஜோலார்ப்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் எப்பொழுது வழங்கப்படும்?
பதில்:- இரண்டு வாரத்திற்குள் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற வறட்சியினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை முழுமையாக தீர்ப்பதற்காக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள 200 கோடி ரூபாய் கூடுதலாகவும், ஜோலார்பேட்டையிருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவதற்கு 65 கோடி ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பேரூர் திட்டத்தைப் பொறுத்தவரை, இன்றையதினம் அதற்கு விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது 4070.67 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது 6078.40 கோடி ரூபாய்க்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலமாக 4267.70 கோடி இன்றைக்கு இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது, எஞ்சிய தொகையான 1810.70 கோடி ரூபாய் தமிழக அரசின் மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி ஆதாரம் வகுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- நெம்மேலியிலுள்ள 4 ப்ளாண்ட் மூலமாக எவ்வளவு எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும்?
பதில்:- தற்போது 210 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது 150 எம்.எல்.டி.க்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. விரைவாக, துரிதமாக மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டியிருக்கிறது. அந்த அனுமதிகள் பெற்றவுடன் 400 எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் திட்டமும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்களா?
பதில்:- ஒட்டுமொத்த தமிழக மக்களே மழை நீர் சேகரிப்பை ஆர்வத்தோடு முன்வந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலே பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகள் ஏற்படுத்தி வருகின்றோம்.
கேள்வி:- நிலத்தடி நீரை மேம்படுத்த என்ன பணிகள் மேற்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்:- மழை நீர் சேகரிப்பு தான் முதற்கட்ட திட்டம். பருவ மழை சரியான அளவில் பொழிந்திருந்தால் ஏரிகள், குளங்கள் முழுவதும் நிறைந்திருக்கும், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டிருக்கும். மழை பொழிந்தால் தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். அதுமட்டுமல்ல, பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது.
கேள்வி:- சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சமன் செய்ய என்ன திட்டங்கள் இருக்கின்றது?
பதில்:- இதில் எந்தவித பாதிப்பும் கிடையாது.
கேள்வி:- காவிரியிலிருந்து 40 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை பெறுவதற்கான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
பதில்:- இதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது என்பது ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு தெரியும். கர்நாடக அரசு, மாத வாரியாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கின்றது, ஆணையமும் அதை வலியுறுத்திக் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் டெல்டா பாசன விவசாயிகளுக்கு மாதாந்திர அடிப்படையிலே வழங்கக் கூடிய நீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது,
கர்நாடக அரசும் தண்ணீரை வழங்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து வருகின்றார்கள். அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்களுக்கு நாம் மறுப்பு தெரிவித்திருக்கின்றோம். எங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கினால் தான் குறிப்பிட்ட காலத்தில் எங்களுடைய விவசாய பெருங்குடி மக்கள் பயிர் நடவு செய்ய முடியும். எனவே, எங்களுக்கு வழங்க வேண்டிய நீரை அவசியம் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நீங்களும் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இருந்த போதும் திட்டப் பணிகளை தொடங்கிக் கொண்டிருக்கின்றார்களே?.
பதில்:- திட்டப்பணிகள் தொடங்கியுள்ளார்கள் என்பது தவறான செய்தி, எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்து கொள்ளவேண்டுமென்பது தான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசையும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டை பாதிக்கக் கூடிய எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம். அதுமட்டுமல்ல, தமிழகத்தினுடைய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நீரைப் பெற்றுத் தருவது தான் இந்த அரசின் முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீர் மறுசுழற்சி வசதி
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
கலைமாமணி விருது முழு பட்டியல் அறிவிப்பு
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பிரசாரம்
24 Sep 2025திருச்சி : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.
-
மதுரையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
24 Sep 2025மதுரை : மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
என் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிறைவேற்றுவேன்: கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
24 Sep 2025சென்னை, என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வ
-
கோவை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 Sep 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, தேனி உள்ளிட்ட
-
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர்: சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
24 Sep 2025சென்னை, ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் என்று அமைச்சர் சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது - ஜெலன்ஸ்கி
24 Sep 2025நியூயார்க் : இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவ
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் சென்று விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2025சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்-வன்முறை : இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
24 Sep 2025லே : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பா.ஜ.க.
-
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக 881 பேர் விரைவில் நியமனம்
24 Sep 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர
-
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
24 Sep 2025சென்னை, திரைத்துறையில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க அ.தி.மு.க.தான் காரணம்: கூடலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
24 Sep 2025ஊட்டி, இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று கூடலூர் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.
-
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்
24 Sep 2025புதுடெல்லி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
24 Sep 2025கூடலூரி : தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
24 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தைவானில் தாக்கிய ரகாசா தீவிர புயல்: ஏரி உடைந்து 14 பேர் பலி - 124 பேர் மாயம்
24 Sep 2025தைபே : தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.
-
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்
24 Sep 2025திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.