எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடிக்கல்...
காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முதல்வராக அம்மா இருந்த காலகட்டத்திலே, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், சென்னை மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே, நெம்மேலியில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அம்மா அறிவித்ததின் அடிப்படையில், அம்மாவினுடைய அரசும் தொடர்ந்து இதை நடைமுறைப்படுத்துவதற்காக, ஒப்பந்தம் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அம்மாவினுடைய அருளாசியோடு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நடவடிக்கை...
அம்மா அறிவித்த மற்றொரு திட்டம், பேரூரில், 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். அந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவதற்கு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒப்பந்த காலத்திற்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டில் இந்தப் பணிகள் நிறைவு பெற்று, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறுகின்ற பொழுது, சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- கடலோர மாவட்டங்களில் இதே போன்று கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் :- வறட்சியான கடலோர மாவட்ட பகுதிகளில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலமாக, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த அரசு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
கேள்வி:- குடிநீர் பணிகளுக்காக மத்திய அரசிடம் ஏதாவது நிதி கோரியிருக்கிறீர்களா?
பதில்:- ஏற்கனவே வறட்சிக்குத் தேவையான நிதி கேட்டிருக்கிறோம்.
கேள்வி:- ஜோலார்ப்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் எப்பொழுது வழங்கப்படும்?
பதில்:- இரண்டு வாரத்திற்குள் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற வறட்சியினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை முழுமையாக தீர்ப்பதற்காக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள 200 கோடி ரூபாய் கூடுதலாகவும், ஜோலார்பேட்டையிருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவதற்கு 65 கோடி ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பேரூர் திட்டத்தைப் பொறுத்தவரை, இன்றையதினம் அதற்கு விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது 4070.67 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது 6078.40 கோடி ரூபாய்க்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலமாக 4267.70 கோடி இன்றைக்கு இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது, எஞ்சிய தொகையான 1810.70 கோடி ரூபாய் தமிழக அரசின் மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி ஆதாரம் வகுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- நெம்மேலியிலுள்ள 4 ப்ளாண்ட் மூலமாக எவ்வளவு எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும்?
பதில்:- தற்போது 210 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது 150 எம்.எல்.டி.க்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. விரைவாக, துரிதமாக மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டியிருக்கிறது. அந்த அனுமதிகள் பெற்றவுடன் 400 எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் திட்டமும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்களா?
பதில்:- ஒட்டுமொத்த தமிழக மக்களே மழை நீர் சேகரிப்பை ஆர்வத்தோடு முன்வந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலே பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகள் ஏற்படுத்தி வருகின்றோம்.
கேள்வி:- நிலத்தடி நீரை மேம்படுத்த என்ன பணிகள் மேற்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்:- மழை நீர் சேகரிப்பு தான் முதற்கட்ட திட்டம். பருவ மழை சரியான அளவில் பொழிந்திருந்தால் ஏரிகள், குளங்கள் முழுவதும் நிறைந்திருக்கும், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டிருக்கும். மழை பொழிந்தால் தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். அதுமட்டுமல்ல, பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது.
கேள்வி:- சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சமன் செய்ய என்ன திட்டங்கள் இருக்கின்றது?
பதில்:- இதில் எந்தவித பாதிப்பும் கிடையாது.
கேள்வி:- காவிரியிலிருந்து 40 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை பெறுவதற்கான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
பதில்:- இதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது என்பது ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு தெரியும். கர்நாடக அரசு, மாத வாரியாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கின்றது, ஆணையமும் அதை வலியுறுத்திக் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் டெல்டா பாசன விவசாயிகளுக்கு மாதாந்திர அடிப்படையிலே வழங்கக் கூடிய நீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது,
கர்நாடக அரசும் தண்ணீரை வழங்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து வருகின்றார்கள். அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்களுக்கு நாம் மறுப்பு தெரிவித்திருக்கின்றோம். எங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கினால் தான் குறிப்பிட்ட காலத்தில் எங்களுடைய விவசாய பெருங்குடி மக்கள் பயிர் நடவு செய்ய முடியும். எனவே, எங்களுக்கு வழங்க வேண்டிய நீரை அவசியம் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நீங்களும் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இருந்த போதும் திட்டப் பணிகளை தொடங்கிக் கொண்டிருக்கின்றார்களே?.
பதில்:- திட்டப்பணிகள் தொடங்கியுள்ளார்கள் என்பது தவறான செய்தி, எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்து கொள்ளவேண்டுமென்பது தான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசையும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டை பாதிக்கக் கூடிய எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம். அதுமட்டுமல்ல, தமிழகத்தினுடைய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நீரைப் பெற்றுத் தருவது தான் இந்த அரசின் முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீர் மறுசுழற்சி வசதி
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.